Friday 14 December 2018

77 seconds later

As her frantically entered, his eyes searched for her in midst of crowd.

There she is, he sighed

She was sitting in the corner of waiting hall with sweat dripping from her head from last night packing. Next to her was her father snoozing on the summer day over the blanket.

As he went towards her, he had thousand questions in the heart and an piercing eyes wanting to know "why she left him uninformed?"

She was his office crush of 2 years and now she was moving away to her home town on a sudden transfer. He was waiting for an farewell message from her but she chose to leave him in silence. He got the wind at the last moment, thankfully his favorite bike didn't ditch him and got to the railway station as its about time she's gonna leave.

Her eyes are unable to comprehend his frantic emotions .

With an usual curious look , she asked " What"

He was like " I came to ask you to be with me, as my love. why you chose to leave me before I propose" but as the deep breath of her father interrupted his emotions , he chose to remain silent.

He just echoed " Nothing, I came to send you off ,hope you got everything before you leave"

She with an unassuming voice told " Ya I packed off things last night and dad helped me to finish the leaving formalities and now we at railway station for the train"

Then with the stumbled words he said "Ok, I got this for you in this train", showing his empty hands

She got curious again , the way she maintains the looks with unsuspecting innocence in her eyes, makes him fall for her again and again.
Then with an blushing smile he gave the snacks from his bag and wished her good luck in the new place.

The train racks came into the platform and it was time to leave.

He wanted to hug her with an kiss planted on her forehead but then he chose not to make the situation awkward in front of her dad.

Then she came in every night in his dreams chasing him towards her love.

3 months later~~

He called up on her and asked if they can meet. His heartbeat is desperately looking for an yes as he already reached the height of desperation and he had to make it happen.

She in a cool voice told "Ok, am there this Saturday come over".


This was the moment he was waiting on ,

He started for cursed his overnight journey and prayed over all the gods in a hope to ask her hand.

He was new to the city ,being an alien to its language and roads doesn't seem to flutter him. He came for her and hes gonna impress her no matter what.He called up on her and they decided to meet on a mall before she moves on to her next appointment.

He came there 20 minutes earlier rehearsing like an every guy who's preparing for propose only be stumbled on words later.

She came in and he forgot his words already. They spoke something out of context and he kept nodding trying to pull out the words.

Curse the hesitation ,he thought.

Finally it came time for them to part. They came outside of mall and hes still trying on the way to bus stand with usual boring parting discussions.

We arrived at the bus stand while he was looking for an chance.

77 seconds later ~~~

Einstein's time dilation suddenly made sense. He cant lose this moment to another chance or her to anyone else.

Without another thought ,he said " May i hold your hand".

Another curious eyebrow rose on her face.

He again said with a confident smile "May i hold your hand forever"

She got confused, then blushed and from there, things got easy.

And guys this is how i met the girl of my life :)



Sunday 9 December 2018

உன் அருகில் பெண்ணே

இருள் விலக காற்றொன்று
மேகம் தனை விலக்கும்
வெண்ணிலவே உன் வானில்
இடம் தருவாயா?
கோடையில் மழை பார்த்து
புற்கள் எங்கும் சிரிக்கும்
அழகே உனை பார்த்து -பூக்களும் சிரிக்கிறதே
இப்புன்னகை எக்காலமும்
என்னோடு துணை வருமா?

நிற்காமலே நிகழ் காலமே
என் நினைவொன்று உனை சுற்றுதே

இராஜ ஹம்சாவில் ஏறி நீ -பறந்திட துணிந்தாய்
கருடனாய் உனை கவர்ந்தேன்
தீபிகா இக்கள்வனை அறிவாயா?
என் கைகள் உனை பற்ற
கடல்கள் ஏதும் பெரிதல்ல
மங்கையே என் மனம் உணர்வாயா?
பல கேள்விகள், வெறும் மவுனங்கள்
உன் வார்த்தையில் நாம் வாழ்க்கை
தொடங்கும் நாளும் வாராதோ?

நிற்காமலே நிகழ் காலமே
என் நினைவொன்று உனை சுற்றுதே
நிற்காமலே நிகழ் காலமே
சங்கீதா உன் முத்தம் கேட்குதே
உனை அணைத்த
நொடியொன்று போதும்
இதயம் தானாய் இடம் மாறுதே
காதல் இத்தனை மாயம் என்று
உன்னோடு சேர்ந்த பின்னே தெரிகிறதே.

Monday 26 November 2018

SOU(L)

நிலவும் வானும் வந்து சேரும்
அந்த மாலை அந்நேரம்
என் அவளே உன் மடியில்
கொஞ்சம் சாயவேண்டி, தாயேன் என் வரம்.
நீயும் நானும், நெடுநேரம் நடந்தோம்
எங்கே முடியும், அந்த கடலின் ஓரம்
நதி ஓடை போலே
அதில் படகை போலே
உலகே மறந்து போகிறதே

Hey, எந்தன் தீபிகா
முன்னாடி வா என் காதல் சங்கீதா
முத்தம் பதிக்க வா
உன்கூட பறந்தே, வானில் போகனும் நான்
வா எந்தன் உயிர் தோழா
என்னோட ஆசை எல்லாம் நீயே நீ
உன் காதல் தரியா நீ
உன் காதல் தரியா நீ

என் கனவு தேவதையே
என்னை கட்டிக் கொண்டாளே
கொஞ்சம் இதயம் காணலையே
I'm in love with your body
And last night you were in my room
And now my bedsheets smell like you
Every day discovering something brand new
I'm in love with your body
Oh—I—oh—I—oh—I—oh—I
I'm in love with your body

Saturday 24 November 2018

காத்திருந்த காதலி

காதலி பிரிவை எழுத
நிகண்டில் வார்த்தைகள் வேண்டினேன்
அவள் காத்திருந்த இரவுகளை
வெண்ணிலவே என்னிடம் சொல்வாயா?

அழகே, நீயில்லா வானம்
காற்றோடு கலைந்த மேகம்
காதலி எங்கே உன் கண்ணீர்த்துளி
அன்பிலா நெஞ்சம்
தாகங்கொண்டு தேடும்.

நீ இல்லாது இந்நொடி நிகழும்
தீச்சுடர் வடு பேசாது வலிக்கும்
பிரிந்திருக்கும் தனிமை
காணாது போல் கடக்கிறேன்.

நீ ஊட்டாத இரவு வேளை
உடன் கழிக்காத மாலைப் பூங்காற்று
என்னவாயிற்று என கேட்காத தலைவலி
நான் வாசிக்காது
நீ படிக்கும் இக்கவிதை
ஏதும் ஓர் நாள் வருமென
அனைத்தும் ஏந்தி கொள்கிறேன்
அதிகம் பிரியாது
சீக்கிரம் முத்தமிட வா.

Sunday 7 October 2018

96

96 திரைப்படத்தின்  சில அசைவுகள்

ராம் அப்படி தான் இருந்திருப்பான்
கோபித்து சென்றாலும்
அவள் வரும் வரை காத்திருப்பான்
அவர்கள் விட்டு சென்ற நொடியில்
இன்னமும் நிற்கிறான்
நிடுவில் ஏதும் மாறவில்லை.

ஆசையாய் காதலித்தவளிடம்
ஏதும் கேட்க மாட்டான்
பார்க்கவும் தயங்குவான்.
இரவு முழுதும் தூங்காது
அவளுடனே சுற்றியிருப்பான்.
ஏக்கத்தோடு இவன் சுற்ற
அவள் மௌனமாய்
"யமுனை ஆற்றினில்" இரசித்திருப்பாள்.

எத்தனை ஆசையாய் இருந்தாலும்
அந்த சின்னஞ்சிறு விரல்களை
பற்றியிருக்க மாட்டான்.
அவள் இருக்கும் இடம்
எங்கிருந்தாலும் வந்திருப்பான்
அப்பொழுதும் பேசியிக்க மாட்டான்
இதயம் எத்தனை கதறினாலும்
சொல்லாமல் விலகியிருப்பான்.

அவள் மட்டும் அறிந்த ஒரு முகம்
இவனுள் இருக்கும்.
அவள் தொலைத்த ஒன்றை
இவன் பத்திரப்படுத்திருப்பான்.
அவள் இடம் மாறி செல்லகையில் கூட
இவன் பேசயிருக்க மாட்டான்.
வழியனைப்பும் முனையும் வரை
வாகனங்கள் எல்லாம் ஒதுக்கி வைத்து
அருகாமையில் அமர
மின்சார ரயிலை வேண்டிருப்பான்.
அவள் வலகி செல்லும் நிமிடம் வரை
இவன் உடனிருப்பான்.
அவள் அந்த நொடி நீள
இறுதி கணத்தில் யோசனைகள் பூக்கும்.
அப்பொழுதும்
அவள் அறியாது செறிக்கும்
காதலையும் கண்ணீர் துளிகளையும்
கேட்டிட வேண்டுமென
மௌனமாய் துடித்திருப்பான்.

அவள் கேட்டிருந்தால்
அங்கேயே கொட்டி தீர்த்திருப்பான்
ஆனால் அவள்
கேட்காமலே சென்றிருப்பாள்.
இறுதி வரை
இவன் வலிகள் சொல்லிட மாட்டான்.
எண்ணங்கள் அவனுள் ஆழுத்த
அவள் விட்டு சென்ற தடத்தில்
அமர்ந்து அழுதிருப்பான்
ஒரு வேளை பேசியிருக்காலம் என.
தனக்கும் சில கரையான்களுக்கும்
"பழைய வாசனை" என
சில நினைவுகளை பூட்டிவைத்திருப்பான்.




Saturday 22 September 2018

பெண் மயில்

அன்று புகைவண்டி நிலையத்தில்
தேடி வந்தது உன்னையல்ல
அக்கணம் புதிதாய் பிறந்த
என்னைக் காண

காதலெனும் உச்சிக்கிளை எட்டாதென
உள்ளம் துறந்த நொடியில்
எங்கிருந்து வந்தாய் தேவதையே
உன் வழித்தடம் எங்கும்
காதலின் ஓசை தானா சங்கீதா?

எத்தனை கர்வம் தான் உன்னுள்ளடி!
என் கவிதைகள்
உன்னை முத்தமிட பொழுதெல்லாம்.

தீண்டி தான் பார்க்கிறாய் என்னை
பிடிவாதம் கொண்டு கண்ணாம்பூச்சி ஆடினால்
கார்த்திகை மழையில் கலாபம் ஒளிந்திடுமா?

தலை குளித்து
உந்தன் கூந்தல் விரிக்கையில்
எத்தனை ஆண் மயில் கவிழ்ந்ததடி!
பெண் மயிலே என்னை கவர்ந்தாய்
மனம் சிக்குண்டு கிடக்குதடி.
ஆண்மையின் வசியம் பெண்ணுள் முடிவது
ஆயுள் முழுதும்
உன்னோடு ஓர் கூட்டினில் வசித்தால் போதும்.

Friday 21 September 2018

காற்றின் மொழி திரைப்படப் பாடல் போட்டி

சூழல்- இத்தனை நாட்கள் குடும்பத்திற்காக வாழ்ந்த மனைவி தனக்கென வாழத் தொடங்குகிறாள். அவளுடைய வெற்றியில் மகிழ்ந்தாலும், அவளுடைய இன்மையை உணர்ந்து கணவனின் மனதில் எழும் உணர்வுகளே இந்தப் பாடல்.
கனவுகளை தேடிப்பறக்கும் மனைவிக்கு வாழ்த்தாகவும், தன்னுள் எழும் வெறுமையையும் இந்த பாடல் பதிவு செய்ய வேண்டும்.


காதல் மடியே....
விடியற் காலம் உன்னை அழைக்கிறதே
விழியோரக் கண்ணீர்த்துளியே
உன் சிறகுகள் விரித்துக் கொள் அன்பே.

தீண்டிய விரல்கள் தனியே ஏங்கி
மீண்டும்  தழுவிட காத்திருக்கும்
பிரிந்து வாழ்வோம் வேலை நேரம்
இரவு வந்து காதல்  வேட்கும்

காலதர் வழியே காற்றை நிறுத்திக்கேள்
தனிமையான பேருந்து நிறுத்தங்கள்
நாம் கழித்த கதைகள் பேசியிருக்கும்.

உறவொன்று வந்திட ஏங்காதே
கரம் கொண்ட கணம்-
பாரங்கள் என்னோடு கலங்காதே
எனக்கென கரு சுமந்தாய்
இன்று கூட்டினை
நான் ஏந்திக்கொள்கிறேன்

சமையலறை வெப்பம்
இனி என் வியர்வை சுவைக்கட்டும்
கொடியில் உலரும் உடைகள்
உன் வாசம் வீசட்டும்
பாதி மடித்த "அலை ஓசை"
உனது அழைப்பு மணிவரை ஒலிக்கட்டும்

வாசல் வரும் வசந்தம்தனை
வரவேற்று செல்லடி என் கண்மணி
வேர்க்கை துளியினுள் வேட்கைக் கொண்டு
வேள்வியில் "ஜோதிக் கா"ணும் வேளையடிக் கிளியே
சூரிய ஒளியென
துணையாக நானிருப்பேன்
வாகை சூடிவா என் மலர்க்கொடியே.



Sunday 16 September 2018

இதயக்குறிப்பு

தினமும் கனவுல
எங்கயோ முட்டுது மூச்சு
சிருள் முடிக்காரிக் காதல்ல
நல்லா தான் சிக்கிகிச்சு மனசு
பேசாம ஒரு நாள் தூங்கிட்டேன்
விடியுற முன்னாடி அலறிச்சு
- என் வாட்ஸாப்பு

பெங்களூர் பொண்ணு
மயக்குறா நின்னு
பெரும் காதல் வீசுதுப் பாரு கண்ணு
இந்த மறதிக்காரனுக்கு மடியொன்னு
அந்த சங்கீதா மனசுல "வைத்தி"ருக்கும்
எந்த கடையில தான் விக்கும்
சட்டை நூலா அவ நினைப்பு!

கடிகார முள்ளப் போல
வெளந்தி புள்ள அவள சுத்தி வரேன்
சண்டிக்காரி சாவிக்கொத்தா
கோயம்பேடுல என்னை இணைச்சா
கூடயே வருவேன்னு சொல்லிவிட்டா
பரிசம் போட்டிருப்பேன் நெஞ்சுல!

தெரிஞ்சு தான் விட்டுடு வந்தேன்
என் டெட்டி பொம்மைய
இங்க எவளும் இல்ல
அவளப் போல என்ன கொஞ்ச
தீபக்குளம் நெறஞ்சிருக்கு நீரோட
தீபிகா எப்போ நீ வருவ விளையாட?



Thursday 23 August 2018

விடியட்டும் காதலியே

என்னவளே
என்றேனும்  ஓர் நாள்
உன்னோடு பேசிட வேண்டும்.

முதன் முதலாய் கடற்கரையில்
நட்பினை கேட்டிருக்க வேண்டும்
என்னோடு கைக் கோர்த்து வாயென
மறுமுறை மனம் திறந்திருக்க வேண்டும்.

எதிரெதிரே இரயில் பிரியும் இடத்தில்
நாமிருவரும் இணைந்து பேசிருக்கலாம்
பேருந்து நிறுத்தமதில்
பிரிவுனை அணைத்த கையோடு
தோழியே துணைவியாக வேண்டிருக்கலாம்.

நீ கழித்த நொடியினில்
நான் வாழ்ந்து பார்த்திட
நமக்காய் நேரம் கூட பின்னோக்கி செல்கிறதோ?
உன் பாதை தேடி
என் தடம் பதிந்திட
கடற்கரை மணலாய் காதலும் சேர்கிறதோ?

என்னை பார்க்கும் பொழுதெல்லாம்
அடை மழை பொழிவதேனோ?
பொழியவில்லை எங்கும் என்பாய்.
எங்கே பொழிவில்லை?
மண்ணிலா? மங்கையின் கண்களிலா?

என் வலிகளுக்கு உறக்கம் உண்டெனில்
உன் மடியினில் உறங்க சொல்லியிருப்பேன்
நமது தூரமது காதிகமெனில்
கவிதைகள் எழுதி நிரப்பிருப்பேன்.

நான் தினமும் கடக்கும் சாலையில்
பசியோடு ஒருவன்
பழம் விற்று கொண்டிருக்கிறான்
எத்தனை காதல் உள்ளிருந்தென்ன காதலியே
உன் நெற்றி முத்தம் இன்னும் காத்திருக்கிறதே.

தனிமை இரவுகள்
எப்பொழுது விடியுமென
கனவுகளில் எண்ணிக் கொண்டிருக்கிறேன்.

Tuesday 7 August 2018

நரவலி

நரவலி- Become weary or tired, as with waiting

இன்றும் வெறும் வானை
பார்த்தே கழிக்கிறேன்
எனக்கு இருள் படைத்த அதே வானம்
உன்னிடம் பகல் காட்டிச் சிரிக்கிறது.

இன்னும் எத்தனை திங்கள்
நீ இல்லா இரவொடு கழித்திட?
இன்று போய் நாளை வரும்
அதுவும் ஒர் தனிமையென கடந்திடும்.

உன் காதல் என்னை செதுக்காமலே
நித்தமும் உடைகிறேன் தெரிகிறதா?
தனிமை என்னை
மலையின் உச்சியிற்கு அழைக்கிறது
நான் விழுந்திட உன் பிரிவொன்று கொள்ளவா அன்பே?

நீ கொண்ட கண்ணீரின்  எளிதாய்
உன்னை காதல் கொள்ள முயன்று தோற்கிறேன்
சிதறி மண்ணில் விழுந்தேன்னெனில்
உன் கண்ணீராய் கலந்திட வேண்டுகிறேன்
கைகள் அதனை துடைக்கையில்
இந்த உயிரினை தாங்கிடு போதும்.

கண் பார்க்கும் காட்சி அனைத்தும்
நீ ரசிக்க வேண்டுமென, ஏனடி அடம் எனக்கு?
என்னோடு நீயும் இருப்பதாய்
தன்னையே வாட்டுகிறேனடி சுழலி
எத்தனை இருக்கை தனிமையாய் அழைத்து
உனக்கென காத்திருக்க சொன்னால் என்ன ?
வேறொரு காதலர்கள் அங்கே முத்தமிட
சிரித்துக் கொண்டே கடந்திட வேண்டாமா சங்கீதா.


Saturday 28 July 2018

கார் நிலா

செங்கதிர் சூரியனின்
தோள் சாய்ந்து சிரிக்கும் கார் நிலா
இவள் கரு விழி சிரிக்கும் பொழுதினில்
கொண்டலிற்குள் ஒளிந்திடுமோ விண் நிலா
இத்தனை அழகும் கொண்டவள் இன்னிலா
கருநாடகம் கொண்ட எம் பெண்ணிலா.

எம் தோழி என வந்து
இன்று தாயான பெண்ணவளே
என் குறைகள் இன்னதென
அத்தனை இரைச்சல் உன்னை சுற்றி
எத்தனை அமைதியாய்
கண்கள் ஊடாக
காதலை மட்டும் காண்கிறாய்.

சங்கீதாவின் சாந்தம்
எம்மை மாலையிட்ட
உங்களோடு மட்டுமே என்பாய்
நம்மை பிரித்து வைத்து
இந்த காலமும் ஏக்கமும்
கண்ணாமூச்சி காட்டுவதனோ?

என்னை எளிதாய் காதலிக்க பழக்க
உன்னால் மட்டுமே முடிகிறது
ஆஸ்டின் நகரத்தின் சாலைகள் யாவும்
ஆருயிரே உன்னை நோக்கி செல்கிறதா?
பேரன்பே கடலில் ஒர் தோணி
உன் கரை சேர காத்திருக்கிறது.

காதல் வேட்கை

"என்ன"
"ஒன்றுமில்லை"
"சரி அழைக்கிறேன்"
அளவிலா காதலின் ஆளுமையில்
அன்றைய பொழுதின் ஊடல்.

கண் காணா தொலைவெனில்
கணைகள் வீசி கொள்கிறோம்
சங்கீதா எனும் பொழுதினில்
சினம் எங்கே தொலைகிறது?

செடியாய் பிறந்திருந்தால்
மண்ணில் புதைந்து
மலரென பூத்து
மங்கையை சூடியிருப்பேன்
மனிதாய் பிறந்து
பிரிந்து வாழ்கிறேன்.

பாதம் வலித்திடும் பிணிவிலும்
கோதை காதல் கேக்குதடி.
எத்தனை தலையணை மாற்றுவது
எதுவும் உன் போல் அணைப்பதேயில்லை.

Thursday 26 July 2018

அதிகாலை அழகே

குங்கும சிமிழே
புன்னகை தீற்றலே
அதிகாலை மலர்ந்தால் உன் முகம்.

மொழியற்ற ஊமைக்கு
கவிதையாய் வந்தாய்
நிறமற்ற தூறின் நுனியில்
வண்ணமாய் இருக்கிறாய்
கருப்பு வெள்ளை வாழ்க்கை
உன் காதல் சாறல் கேக்குதடி.

கனவில் தான் காதலியே
முத்தமிட வருவாயா
மூச்சிரைக்க அணைப்பாயா
சொல்லடி என் தேவதையே.

தினம் புதிதாய்
கண்கள் பறிக்க
வார்த்தை துளிர்க்குதடி
ஆனால் நாள் முடிவில்
மெல்லிய முக நெளிவில்
கற்பனை அனைத்தும் கலைத்து செல்கிறாய்.

எதை கொண்டு உன்னை காதலிக்க
வரி எழுதி ரசிப்பேனா
இல்லை
கானம் பாடி கவர்வேனா
சங்கீதாவே என் காதில் கூறடி.

இந்த காதல் தான்
உன்னை அணைக்க தள்ளுதடி
கட்டி கொண்ட கனம்
காலமும் வெட்கத்தில் உறையுதடி.

கனவில் தான் காதலியே
முத்தமிட வருவாயா
மூச்சிரைக்க அணைப்பாயா
சொல்லடி என் தேவதையே.

Sunday 8 July 2018

நானுற்றி பன்னிரண்டு முத்தம்

உறக்கத்தில் எழுந்து என்னிடம்
முத்தம் கேட்கிறாய் தேவதையே
படுக்கையில் உன்னை அணைக்க
அடுத்து நான் இல்லை காதலியே.

துணையில்லாத வறியவன் நான்
முத்தக் கொடை எங்ஙனம் புரிவேன்
எம் கண்ணீர் துளிகள்
உன்னை சீண்டாது
மனக் குடைனுள் மறைத்துக் கொள்கிறேன்.

உனக்காக மட்டும்
சிரிக்க தெரிந்த முகமிது
அதுவும் உன் கருப்பு வெள்ளை
இரட்டை ஜடை புகைப்படம் தருவது.

தீயே உன் தாகம் தீர்க்கா நீரிது
பிரிந்து வாழும் பிழையும் எனது
கார்த்திகை கன்னியே
கட்டிக்கொள் என்னை
கண்கள் மூடி உன்னுள் கலக்கிறேன்.

விரைவில் நம் மணநாள் வரும்
அன்றைய இரவு
நான் ஒன்று பதித்து
நீ ஒன்று பற்றி
இதழ் இரண்டும் பனித்து
மொத்தம் இடலாம்
நானுற்றி பன்னிரண்டு முத்தம்.

Monday 2 July 2018

மருதாணி கை பிடிச்சு

என்னோடு இருக்கற ஒருத்தனுக்கு
ஒரு மாசம் மனைவி இல்லாம
உலகமே ஓய்ஞ்சிருச்சாம்
வெள்ளில பொறந்த என் தங்கம்
எப்போ என்னோட சேரும் தெரியலயே?

என் செவ்வாய் இதழழகிய
திங்கள் தாண்டி தீண்டலையே
கண்ணீரோட சாயம் காஞ்சி
கல்யாண சேலை வாங்கி
கையோடு அணைப்பதப்போ?

மருதாணி கை பிடிச்சு
மோதிரம் தான் இணைச்சு
கடலோட நான் வருவேன்னு
மீனராசிக்காரி கிட்ட சொல்லி வைச்சேன்
என்னும் நான்
மல்லிகை வைச்சிவிடலையே
மணக்க மணக்க
அவ வைச்சு சாப்பிடலையே.

உன் நெத்தி குங்குமத்துல
எத்தன சாமி நேந்திருக்கும்
எனக்காக தல சாய
உன் மெத்த முழிச்சிருக்கும்
என்னோட காத்து வாங்க
அத்தன கடலும் அலைமோதும்
நம்ம கல்யாண நேரந்தான்
கை சேறுர காலம் வருமா?

நித்தம் உசிரு போனாலும்
நினப்பெல்லாம் பெங்களுர்காரி மேலடி
நெஞ்செல்லாம் முள் தைக்குதடி
உன் முத்தம் ஒண்ணு போதுமடி
இந்த உலகத்தோட முகத்துல
என் மனசு ஒண்ணும் இல்லடி
நாளைக்கு நம்ம மவ சொல்லட்டும்
அப்பன் ஆத்தா காதல பத்தி.

Thursday 21 June 2018

என்னருகே வா காதலி

வில்லாய் வரைந்த புருவம்
இடையில் ஓர் சந்தன கீற்று
இந்த அழகு அவளிற்கு
இன்னும் வர்ணனை எதற்கு?

ஐம்மொழி செல்வியின்
கண்களில் விழுந்திட
தவம் புரிந்தேன்
கண் ஏட்டு புற்களுக்கு
நித்தம் நீர் இறைப்பவள்
விழியசைக்க அழுத்தமா?

துகளான விண்வெளியில்
என் இகலாய் ,தனியுலகமாய்
நீ இருந்தால் போதும்.

நீர் அளந்து வான் பறந்து
காற்றோடு கலந்து
உலகின் சொற்கள் மறக்கட்டும்
மார்ப்போடு அணைத்து
நாம் பேசினால் போதும்.

சினம் சீண்டல் நகை அழுகை
எத்தனை வேண்டும் பேச
காதோரம் என்னை வழியனுப்ப
ஒற்றை வார்த்தை இருக்குதடி உனக்கு.

காடுகள் சுற்றிவிட்டு
காதலி பேசும் நொடியில் வருகிறேன்
எத்தனை காலம் வேண்டும் சொல்லிவிடு
நான்  உறங்க போவதற்கு முன்.










Monday 18 June 2018

ஒளி

ஒளி கொஞ்சம் கூராய் கிழித்து
எம் சிரத்தை பழித்து
வலியில் வீழ்த்தி செல்கிறதாம்
மருத்துவர் சொல்கிறார்
என்னை கொல்லும் வலியின் காரணி
ஒளி தானென ஒப்புக்கொள்கிறேன்.

அது தினமும் என் கண் முன்
காதல் வைத்து
வார்த்தை வாள் வீசி
எங்கோ ஓரிடத்தில்
கண் சிமிட்டும் நிலா!

ஒரு வேளை
அவள் பெயரே ஒளி என்பதால்
"ஒளி"ந்து கொண்டே
அகக் காதல் மொழியில் முத்தத்தூது
முகங் காட்டா வழி சங்கீதாஸ்வரம்
அவளிற்கு பிடித்தமானது போலும்

குளிகை தனை தேடி
அவை தீர்ந்து விட்டதென்கிறாள்
ஆம் காணவில்லை
கடவுள் வடித்து வைத்த வளைவொன்று
அடுத்த முறை
நான் வந்து வரைய வேண்டும்
அவள் கன்னத்தில்.

நித்திரை தொலைத்தவனுக்கு
மாத்திரை வலி போக்குமா?
உன் திரை என்னை வதைக்கிறது.
நீ பேச அழைத்தால்
விண்மீன்களும் வந்திறங்கும் இங்கு
நான் பேச அழைத்தால்
தோட்டத்து ரோஜா சொல்கிறது "நத்திங்"
வானின் கீழ் அனைத்தும் உனது
என்னையும் சேர்த்து .
மீண்டும் சேரும் வாழ்க்கை அருகில்
அந்நாள் வரை
அந்தி பொழுதில் அல்லனாய்
தொல்லையாய் அழைப்பேன்
(மனம்) நிறைய பேசடி மனைவி.

உங்களை பிரிந்து புண்ணான நெஞ்சம்
புன்னகைக்க தெரியவில்லை என்பாள்
என் பால் கொண்ட
காதலிற்காக கேட்கிறேன்
கொஞ்சம் சிரி :)

தீ பக்கத்தில் வா
தீபிகாவாய் முத்தமிடு காதலி.

Saturday 5 May 2018

நிழற்குடை

காதலி உறங்கும் இரவே
உன் அருகே படுத்திருந்தால்
தேவதைகளின் துயில்
எத்தனை அழகென அறிந்திருப்பேன்

உறக்கத்தில் உன்னோடு பேச
நான் அனுப்பும் காதல் முத்தங்கள்
உன்னை தொட்டு விட தயங்கி
என்னுள் புதைகிறது மன அழுத்தமாய்

காதலியே உனக்காய் காத்திருந்து
என் பகல் முழுதும்
உனது இரவை விட கருமையாய்
ஊமையின் வலியாய் உடைக்கிறது

உறக்கத்தில் என்னை எழுப்பி
இரவுத்தோறும் உரையாடு என்பாய்
காதலி விழிகள் மல்லிகை மொட்டுகள்
எங்ஙனம் அவிழ செய்வேன் நான்?

மழை நீர் சீண்டினால்
என் உறைக்குள் உன்னை போர்த்துவேன்
ஒவ்வொரு இரவும்
உன் விழி நீர்
சங்கமிக்கும் காரணி நான்
முகப்பருவாய் உன்னோடு இருந்து வலிக்கிறேன்
என் காதலின் பயன் தான் என்னவோ?

உலகத்தின் காதலர்கள்
அவர்தம் துணைக்கு முத்தமிடுகையில்
என் காதலிகென எங்கோ அமர்ந்து
பொருள் தொலைத்த கவிதைகள் தொகுக்கிறேன்

உன் மனதை தொட
பொருள் வேண்டாம்
காதலியின் அருள் பெற
என்ன தவம் வேண்டும்?

என்னை கொல்லும் தனிமையும்
உணவற்று கிடைக்கும் பணமும்
நீ அழைத்த மறுகணம்
வீசி விட்டு வருகிறேன்
உன் மடியில் வாழும் அந்நொடி
சொர்க்கம் கூட வேண்டாம் எனக்கு
என்னும் என் மனம்
உனக்கு அறியா வேறு மொழியா?

உன் இதயம் இதை புரியாதெனில்
என்னை அழைத்திடும் வாசல் ஏது?
என் காதலியின் மனம் ஏற
நிழற்குடையில் காத்திருக்கிறேன்
சீக்கிரம் வந்து என்னை அணைத்துக் கொள்.

Tuesday 17 April 2018

மன்னித்து விடு காதலி

சிறு வயது மாந்தோப்பு நினைவுகள்
கனவில் வந்து செல்கிறது காதலி
எட்டா உயரத்தில் பறித்த கனியாய்
என் மனதை பறித்து சென்றாய்.

சிரித்தவள் என்னை பறித்தவள் மனதில்
முள்ளினை தைத்தேன் ஒர் முறை
இன்று மற்றவரின் புறம் மீது
என் மனைவியின் பிழை இருக்காதென
முன் நின்று சொன்னதடி காதல்.

உன் பிழை என்று
இன்று எதை சொல்வேன் நான்?
இதயம் உடைக்கும்
என் மீதான காதலை தவிர
எளிதாய் உன்னை பழித்து விட்டு
கடல் தாண்டி கண்ணுறங்குவேனோ நான்?

கரம் பிடித்த உன்னை
பார்க்கும் திசையெங்கும் தேடுகிறேன்
உன்னோடு சிரிக்க மறக்கிறேன்
நீ பேச துடிக்கும் காலை கனவில்
கண் தெரியா இருட்டினில்
தலையணை நனைக்கிறேன் நான்

நேர்மறை நெருக்கமாய்
சேர்ந்திட கூடா எதிர்மறையென
இன்று எல்லோர் ஏசும் காரணியாய்
என் காதல்

என்னால் ஏன் இத்தனை துன்பம் உனக்கு
இதய கீறலில் சொட்டும் இரத்தம் புதைத்து
நீ விழிக்கையில் ஆசை முத்தமிட்டு
கொல்லும் வலியின் மேல்
புன்னகை போர்த்தி
அருகில் அணைக்கும் துணைவனாய்
ஒவ்வொரு பொழுதும் வாழும் கணவனாய்
எப்பொழுது நிகழப் போகிறேன் நான் :).

Tuesday 13 March 2018

உறங்கும் தேவதை

நாம் இருவரும் கூடும்
இரவு பொழுதில்
என்னை விடுத்து
விளக்கை அணைக்க சொல்கிறார்
உன் தந்தை

செல்லமாய் உன்னை சீண்ட
சினம் கொண்டு நோக்காதே
நேரலையில் நெஞ்சில் காயம்
உன் மூக்குத்தி

முன் விழும் முடிகளை
பின் தள்ளி விடாதே
ஒதுங்கும்  முடியில்
ஒளிந்திருக்கும் அழகால்
மூச்சு நின்று விடுகிறது

நெற்றியில் வைக்கும் குங்குமமாய்
குடியிருக்கும் இதயத்தை
அவ்வப்போது தீற்றாதே
இராமன் தொட்ட அகலிகையாய்
உயிர்ப்பிக்கிறது கவிதைகள்

மனதை சிறை கொண்ட
தனிப்பெண் உன்னை கவர
வார்த்தை தேடி தவிக்கிறது சிரை
படித்த உடன் பகிர மாட்டாய் மனதை
அலைப்பேசி அழைக்க காத்திருந்து
இம்முறை வலிக்கும் இதயம்

மறுமுறை உன்னை பார்க்கும் முன்
நூறு கவிதைகள் முடித்தாக வேண்டும்
எழுத்தையும் ஆணையும் சூடிய பின்
உன் விழியின் முன்
கூரிழந்து நிற்கும் என் எழுத்தாணி .










Sunday 11 March 2018

ஒளிச்சேர்க்கை

A short poem on daylight saving dedicated to my wife -Deepika

அன்பார்ந்த காதலே உனக்கொரு மடல்.

அலைப்பேசியில் அளவளாவும் பொழுது
அதிகாலை 1.59 மணியின்
பின்வரும் நொடி மூன்றென ஒலித்தது.
இரு கண்ணிமை பொழுதினில்
இரண்டரை நாழிகையும்
இரண்டற கலந்திடுமா?
ஐன்ஸ்டீனின் சார்பியலில்
காதலும் சார்ந்திடுமா?
காலை ஒளிச்சேர்க்கையில் காதலாகி
தேநீர் கோப்பையில் கலந்திடுவோமா?
நாமிருவரும் ஈரிண்டென நல்கி
பிரிந்திருந்த காலம் தனை
ஒடுக்கற்பிரிவில் இணைத்து
ஒர் உயிரினில் பிணைந்திடுவோம்.

Monday 26 February 2018

பிப்ரவரி 25

ஏதோ ஒரு பாடலும்
நம் புகைப்படமும்
இங்கே வீசி செல்ல எண்ணம்
ஆனால் என்னை முழுதாய் கொண்டு
மூச்சிரைத்த நாளை
இன்னொரு நினைவில் படைப்பதாய் எண்ணமில்லை.

மீண்டும் ஒரு முறை அல்ல
இறுதி முறையாய் - அந்த காதல் பார்வையை
பார்த்துவிட்டு பறந்திட வந்தேன்
உன்னை மணப்பெண் ஆக்கிட
வீட்டில் நடப்பதை அறிவேன்.

செங்கோடு கருப்பு வெள்ளையில் நின்றிருக்க
அங்கே நீல வானின் தேவதை இறங்கி வந்தாள்
உன் எண்ணம் உடை தேர்வில் இருக்க
நான் உன் உரியவனென தெரிவாக துடித்தேன்.

அந்த சாலை ஓர கடைகள் அலைந்தோம்
உன் கைகள் பற்றிடும் தொலைவு வரை நடந்தேன்
வழியில் என்ன கடந்தேன் தெரியவில்லை.

அத்தனை கோடை உன் மேல் பாய்ந்திட
புது மலரென நீ சிரிக்க
உன்னை பார்த்து கொண்டே யாவும் மறந்தேன் நான்
நீ சிரிக்கும் பொழுதினில்
இதயம் உறைந்திருக்க
தாமிய கணம் தீண்டிய சிகையில்
மீண்டும் மீண்டும்
காதலாகி விழுந்தேன் நான்.

இத்தனை நாள் முயன்றும்
எந்த காதலும் பொருந்தவில்லை
கருடன் இட்ட மாலையென
அறிதாய் ஓர் இதயம் திறந்தேன்
உன்னை அன்றி வேற்றோர் பெண்ணை விரும்பவில்லை.

இன்று நீயும் நானும் காதல் பேச
மத்தியில் அமர்ந்து தோள் சாய
என்னிடம் அருகாமை இல்லை
நீ என் மொழி
உன்னிடம் கவிதை கொள்ள வருவேன்
இன்னும் பல தனிமை கடந்து
என்னோடு நீ இருப்பாய் காத்திருப்பேன்.

Wednesday 21 February 2018

கனவே கலைந்திடு

இறந்து போன நினைவொன்று
கலைத்து செல்கிறது உறக்கத்தை
காத்திருந்தேன்
கரம் பற்றினேன்
கண்ணீர் சிந்தினேன்
எதற்கும் உன்னிடம் கண்ணில்லை
உயிரே உனக்கு பார்வையாய் இருந்தேன்
கண்கள் மூடி
கொன்று புதைத்தாய் என்னை.

நீ வீசி சென்ற அன்று
கூந்தல் சூடாது கசங்கிய மாலை
தெருவோரம் சரிந்து கிடந்த
சிரிக்கும் புத்தர் சிலை.

என்னுள் இக்கணம்
பெயராக புலனாக
நீயாக நிஜமாக ஏதுமில்லை
தீ வைத்த சிதையின்
தழும்பாக மட்டுமே இருக்கிறாய்
காலம் கடந்த நினைவே
கடிகார முள்ளாய் பிரிந்திடு.

இன்று காதலிக்கிறேன்
மாலையிட்டு மையலாய்
கொள்ளை கொண்டவளை
நீ மறுத்த அத்தனை அன்பையும்
அவளிடத்தில் கொட்டுகிறேன்
என் மனவெளியில்.

தீக்கனா எனை தொடுத்தால்
பிகமென பாடி வருடுவாள்
காதலி அவளும் அருகிலில்லை
என் காயங்கள்
அவள் மருந்திட ஆறும்
ஆனால்
என்னை எரித்திடும் அனலே
காற்றோடு அணைந்திடு
நாளை நான் மறைந்தாலும்
அவளை காதலித்தவனாய் தான்
நிலைத்திருப்பேன்.

Monday 19 February 2018

நினைவுப் பேழை

காதலில் தான் எத்தனை நினைவுகள்
முதல் நாள் உடை என்ன?
இன்று காதலில் என்ன நிகழ்ந்தது?
எப்பொழுது ஊடல் கொண்டோம்?
அத்துணை நினைவுகளும்
காதலரோடு அழிகிறது
கணிணி போன்றே காதலும் மாறுகிறது.

முந்தைய காதல்-
பழகு, காதலி, கரம் கோர்த்து கொள்
மணம் செய், நிலவிற்கு செல்
கலவி கொள், குழந்தை பெற்றிடு
பணம் சேர், பெற்றதை கரை சேர்
மாழை இழந்து ஓர் நாள் மடிந்திடு.

துணை கொண்டவள் காதலை
முகநூல் முத்தத்தோடு நிறுத்திடு
நான்கு லைக் வாங்கி
நாலு கோடி பேரில் கலந்திடு.

பிந்தைய காதல்-
பார், பிடித்திடு
மறைவாய் முத்தமிடு
கலைத்திடு பின் கலைந்து விடு
முறித்து முகநூல் பதிவிடு
கொஞ்ச நாளில் வேற்று பெண்ணிற்கு மாறிடு.

ஆண்டுகள் கடந்தும்
உறங்கும் காதல்-தாஜ்மஹால்
பிரிந்து வாழும் காதல்- சலீம் அனார்க்கலி
பிரிவிலும் சேர்ந்த காதல்-நள தமயந்தி
நாம் கொண்ட காதலும் சிறிதில்லை
கல்வெட்டில் பதிந்திட சோழனில்லை
காலத்தில் நிறுத்திட கம்பனில்லை

என்னை உருமாற்றி
நீ உருகிய காதலை
நின்று முத்தமிட்டு
நூறு பாடல் பூச்சூட வேண்டும் என் அமராவதிக்கு.

உன்னை பிரிந்து வாழும் ஒவ்வொரு நொடியும்
சிரம் போன்று ஒற்றையாய் வலிக்கிறது இதயம்
இந்த காதலும் அன்பும்
வாழ்வின் நீரோடையில் மறையாது
அகவை கடந்த பின்னும்
ஓர் மாலை நேரத்து மையல் தருணம்
தீ பிங்கமென காதலி முகம் ஒளிர
அவளிற்காய் வரைகிறேன்
அருமன் தேன் துளிகளை.

கவிதையின் பின்குறிப்பு:
நான் உன்னை காதலிக்கிறேன்

Tuesday 13 February 2018

தலையணை

தனிமையில் நான் உன்னை சீண்டினால்
செல்லமாய் எனை தாக்கும் ஆயுதம்
எனை தழுவிய பொழுதெல்லாம்
உந்தன் கூந்தல் சேர்க்கும் பேழை
தனியே தவிக்கும் நள்ளிரவில்
கண்ணீரின் ஈரம் தாங்கும் நுதிக்கை
இரை தேடும் தனி பறவையாய்
ஊர் எங்கும் திரிந்துவிட்டு
இரவில் உன் நினைவை இசைக்கும்
என் பிரிய வானொலி -தலையணை

கனவில் நீ தந்த முத்தங்களை எல்லாம்
தலையணை உறையில் சேர்பித்து
நினைவில் கொஞ்சும் கவிதையாய் வடிக்கிறேன்
நிலவின் மடியில் வெண்மேகமாய்
உள்ளம் முழுதும் தீயே பரவுகிறாய்
வஞ்சி என்னுள் உறங்கடி
சோம்பல் முறித்து அழகாய் தூங்குகையில்
நீ கேட்டிறாத பல கவிதைகள்
என் தலையணையுள் அடக்கம்
கொஞ்சம் அதனிடம் கேளடி

இலவம் பஞ்சினை இறுகி அணைக்கும் திண்டுறையென
நெஞ்சறையில் உன்னை சுமக்கிறேன்
பிரிந்திருக்கும் காதலர் தம்மை
கருப்பு வெள்ளை புகைப்படம் போல்
பிணைத்திருக்கும் விந்தை
தலையணையில் பிறக்கும் காதல் சிந்தை

என்னை தினமும் உறங்க சொல்லும்
உன் உதடுகளுக்கு சொல்
உன் மடியிற் சிறந்த தலையணை
இன்னும் பிறக்கவில்லை.

Friday 9 February 2018

காதலடி உன் மேல்

இன்று காதல் அறிவி தினம்
பெண்ணருவி உன்னில் தான் எத்தனை நீரடி
அதனுள் முழ்கிட காத்திருக்கிறேன்
-கடற் தாண்டி
ஒடையில் வழிந்தோடும் தாமரை இலையென
உன் நீரில் என்னை தவழ்ந்திடடி கண்மணி
அகன்ற வாய்காலில் மீன்கள் துள்ளிடும்
உன் விண்மீன் விழியில்
என் வாழ்க்கை துளிர்விடும்

கண்கள் தூரம் கடந்து
கனவுகளில் விழித்திருக்கிறேன்
அழகிய நினைவுகளின் கூடை சுமந்து
மயிலிறகால் கீச்சங் கீதாஞ்சலி இசைத்து
மீத முத்தம் முடியும் முன்
கண்ணுறங்க செல்கிறாய்
தொடர்பற்ற பொழுதினில்
இதழ் பற்றாது தொலைகிறேன் என்னை தேடடி

காதல் சின்னங்கள் தன் பால்
இதயம் மொழிவதில்லை
பார்வையற்ற வீணை மீட்க
இசையின் தாகம் வேண்டிடுமா?

இந்நாளில் உன் முகம் தாங்கி
மலர் கொற்றையில் கன்னம் தழுவி
தீ பிழம்பின் காலடியில்
உறங்கிடும் பனித்துளியென
உன் மடியில் உலகம் மறந்திட வேண்டும்
மழலைகள் பல கொண்ட பின்னும்
உனக்கென கவிதைகள் வரைந்திட வேண்டும்
என்னோடு காதலில் கூடடி
முழுமை நீயென வாழ்ந்திட வேண்டும்

Tuesday 23 January 2018

மணையாள்

அருகே உன் தோள் சாய்ந்து
காதல் மொழி பகிர்ந்து
தீயினுள் உருகி நீரென பாய்ந்து
பிரியமாய் உனக்கு மோதிரம் கோர்த்து
காதோரம் தீண்டினேன் வேடகம் தொடுத்து

நிலவே நீ வானை சாய்த்து
கனவுகள் கொள்ளை கொண்டாய் திருடி
பிறை நெற்றி் மத்தியில்
என்னை முடித்து வைத்தாய் சுட்டி
விவாக வேள்விதனில்
நாம் இணைந்தது நேற்றடி
என்றும் என் சகம் நீயடி
சதகமும் உன்னோடு தானடி