Sunday 9 December 2018

உன் அருகில் பெண்ணே

இருள் விலக காற்றொன்று
மேகம் தனை விலக்கும்
வெண்ணிலவே உன் வானில்
இடம் தருவாயா?
கோடையில் மழை பார்த்து
புற்கள் எங்கும் சிரிக்கும்
அழகே உனை பார்த்து -பூக்களும் சிரிக்கிறதே
இப்புன்னகை எக்காலமும்
என்னோடு துணை வருமா?

நிற்காமலே நிகழ் காலமே
என் நினைவொன்று உனை சுற்றுதே

இராஜ ஹம்சாவில் ஏறி நீ -பறந்திட துணிந்தாய்
கருடனாய் உனை கவர்ந்தேன்
தீபிகா இக்கள்வனை அறிவாயா?
என் கைகள் உனை பற்ற
கடல்கள் ஏதும் பெரிதல்ல
மங்கையே என் மனம் உணர்வாயா?
பல கேள்விகள், வெறும் மவுனங்கள்
உன் வார்த்தையில் நாம் வாழ்க்கை
தொடங்கும் நாளும் வாராதோ?

நிற்காமலே நிகழ் காலமே
என் நினைவொன்று உனை சுற்றுதே
நிற்காமலே நிகழ் காலமே
சங்கீதா உன் முத்தம் கேட்குதே
உனை அணைத்த
நொடியொன்று போதும்
இதயம் தானாய் இடம் மாறுதே
காதல் இத்தனை மாயம் என்று
உன்னோடு சேர்ந்த பின்னே தெரிகிறதே.

No comments:

Post a Comment