அன்பிற்குரிய காதலி
ஆசையில் ஒரு முறை அணைப்பாயா
இதயம் முழுதும் நீயடி
ஈர் உடல் ஓர் உயிர் நாமடி
உயிரில் கலந்த எரிமலை தீயே
ஊரறிய மணமுடிப்பதெங்கே?
எங்கு காணினும் கனவாய் உன் முகம்
ஏங்கும் மனதிற்கு ஆறுதல் எங்கனம்?
ஐயம் பயக்கும் பிரிவினை ஆயிரம்
ஒரு முறை தீர்வாய் ஆழ்ந்த முத்தம்
ஓர்மை கொள்ளும் இருமை விலகிடும்
ஔவை வயதிலும் (நம்) நேசம் நிலைத்திடும்
இ ஃ து உறுதிமொழி அல்ல உயிரெழுத்து.
ஆசையில் ஒரு முறை அணைப்பாயா
இதயம் முழுதும் நீயடி
ஈர் உடல் ஓர் உயிர் நாமடி
உயிரில் கலந்த எரிமலை தீயே
ஊரறிய மணமுடிப்பதெங்கே?
எங்கு காணினும் கனவாய் உன் முகம்
ஏங்கும் மனதிற்கு ஆறுதல் எங்கனம்?
ஐயம் பயக்கும் பிரிவினை ஆயிரம்
ஒரு முறை தீர்வாய் ஆழ்ந்த முத்தம்
ஓர்மை கொள்ளும் இருமை விலகிடும்
ஔவை வயதிலும் (நம்) நேசம் நிலைத்திடும்
இ ஃ து உறுதிமொழி அல்ல உயிரெழுத்து.