காதல் எனும் தீபம்
வழியாறியாக் காட்டினில்
கொடும் இருளில்
கைப் பற்றி அழைத்து செல்லும் மழலை.
இமைப்பின் கரப்பாக்கு அறிவல்
என்கிறதாம் வள்ளுவம்.
குறள் அறிய தேவையில்லை பெண்ணே,
நீ இல்லா எல்லா இரவும்
நோவும் இந்த கண்களை பார்!
பாய்ந்தோடும் ஹட்சன் ஆற்றினை போல
செயற்கையான என் புன்னகையின் கீழ்
தனலென சுடுகிறது உன் தனிமை.
உனக்காய் இதுவரை
பல்லாயிரம் அடிகள் தூவியுள்ளேன்.
என்னவளை எண்ணுகையில்
ஊற்றாய் வரும் வரிகளை
பல்லாயிரம் அடிகள் மேலே
நிலவின் வாயிலில் வடிக்கிறேன்.
நிலவின் நிழல் சில நேரம்
பெருச்சூரியனை மறைக்கும்.
தீயினில் இட்ட பசுநெய்
பின் தீயினுள் சங்கமிக்கும்.
காழிலா இந்த இதயம்
துடித்திருக்க வேண்டும் உன் கரம்.