Thursday 3 August 2017

வலியில் வழி வைத்து

வாழும் வரை நீயடி
நம்மை வாழ்த்த வழி சொல்லடி
இருப்பில் கால்கள் வைய்யடி
நீ இல்லா கனவுகள் ஏதடி?
ஈடன் தோட்டத்து மலரும் நீயடி
நம் வனத்திற்கு கண்ணீர் பூக்கள் ஏனடி?
என் கதவுகள் மூடிக்கொள்வதினால்
காதல் மொழியின்றி தவிக்கறேனடி
ஆயிரம் விளக்குகள் எரிந்தென்ன லாபம்
வழியறியா விழிகளுக்கு
ஒளி வெள்ளம் எதற்கடி?
என்னோடு வருகையில்
முள்ளாய் வார்த்தை கொட்டுமடி
நம் உறவே நிலைக்காதென
உலகம் சிரிக்குமடி
வசந்தமற்ற வனத்தின் தேனீ(நீ)யே
உனக்கான பூங்காவனம்
தனியே உள்ளதடி
யாரும் பார்க்காத கவிஞன் நான்
ஊரே மெச்சும் கவிதை நீ
உன்னை படிக்கும் கண்களோ கோடி
நீ செல்லும் பாதையும் தூரமடி
இத்தனை கண்ணீரும் உனக்கெதற்கடி
செல்லமே!!