நானும் தனிமையும்
நதியோரம் அமர்ந்திருக்கிறோம்
புறம் பற்றும் வெப்பம்
வெய்யில் சுடுவதாய் கூறியது
இன்றைய நண்பகல் அனல்
நீ அற்ற அகத்தனிமையை
விட கொஞ்சம் குறைவு தான்
இந்த ஒரு வாரம்
நான் யாருடனும் பேசவில்லை
நீ அருகே இல்லாது
எனக்கு ஏது சொற்களும் கவிதைகளும்
உன் அறைகளோடு சேர்த்து
என் மனதையும் தாழிட்டு செல்கிறாய்
-என்ன செய்வேன்?
நமக்கான எதிர்காலம் வேண்டி
இடைவெளிகளை ஏற்றுக்கொள்கிறேன்
இந்நதியின் ஓரம்
அழகான ஓர் குளம் உள்ளது
அக்குளத்தினுள் அல்லியும்
ஓற்றை மீனும் உள்ளது
அக்குளத்தின் பெயர் அல்லிக்குளம்
குளத்தினுள் எத்தனை மீன்கள் இருத்தாலும்
என்றும் அது அல்லிக்குளம் தான்
அல்லி அழகானது என்பதினால் அல்ல
அல்லி தான்
குளத்தின் இயற்கை அரண்
அல்லி கொடியாயினும்
குளத்தின் உயிர்வாழ் அடித்தளம்
மீன்கள் அல்லியினை நோக்கி வாழும்
அல்லிக்கொடியினை சுற்றும் மீனாய்
இங்கே இருளில் சுற்றுகிறேன்
தீப்பந்தத்திற்க்கும் வெண்ணிலவிர்க்கும்
இரவில் பூக்கும் அல்லிக்கு வேற்றுமை தெரியாதா?
பிடித்தமான விழிகள் யாதெனில்
காலையில் உன்னோடு விழிக்கும் கண்கள் தான்.
காதல் என்பதே நீயென்பதால்
இனி யாரோடு சாயும் இம்மனம்.
No comments:
Post a Comment