Sunday 24 March 2024

அல்லிக்குளத்து மீன்


நானும் தனிமையும்

நதியோரம் அமர்ந்திருக்கிறோம்

புறம் பற்றும் வெப்பம்

வெய்யில் சுடுவதாய் கூறியது

இன்றைய நண்பகல் அனல்

நீ அற்ற அகத்தனிமையை

விட கொஞ்சம் குறைவு தான் 


இந்த ஒரு வாரம்

நான் யாருடனும் பேசவில்லை

நீ அருகே இல்லாது 

எனக்கு ஏது சொற்களும் கவிதைகளும்

உன் அறைகளோடு சேர்த்து

என் மனதையும் தாழிட்டு செல்கிறாய்

-என்ன செய்வேன்?

நமக்கான எதிர்காலம் வேண்டி

இடைவெளிகளை ஏற்றுக்கொள்கிறேன்


இந்நதியின் ஓரம் 

அழகான ஓர் குளம் உள்ளது

அக்குளத்தினுள் அல்லியும்

ஓற்றை மீனும் உள்ளது


அக்குளத்தின் பெயர் அல்லிக்குளம்

குளத்தினுள் எத்தனை மீன்கள் இருத்தாலும்

என்றும் அது அல்லிக்குளம் தான்

அல்லி அழகானது என்பதினால் அல்ல

அல்லி தான் 

குளத்தின் இயற்கை அரண் 

அல்லி கொடியாயினும்

குளத்தின் உயிர்வாழ் அடித்தளம்


மீன்கள் அல்லியினை நோக்கி வாழும்

அல்லிக்கொடியினை சுற்றும் மீனாய் 

இங்கே இருளில் சுற்றுகிறேன்


தீப்பந்தத்திற்க்கும் வெண்ணிலவிர்க்கும்

இரவில் பூக்கும் அல்லிக்கு வேற்றுமை தெரியாதா?

பிடித்தமான விழிகள் யாதெனில்

காலையில் உன்னோடு விழிக்கும் கண்கள் தான்.

காதல் என்பதே நீயென்பதால்

இனி யாரோடு சாயும் இம்மனம்.

No comments:

Post a Comment