Tuesday 23 January 2018

மணையாள்

அருகே உன் தோள் சாய்ந்து
காதல் மொழி பகிர்ந்து
தீயினுள் உருகி நீரென பாய்ந்து
பிரியமாய் உனக்கு மோதிரம் கோர்த்து
காதோரம் தீண்டினேன் வேடகம் தொடுத்து

நிலவே நீ வானை சாய்த்து
கனவுகள் கொள்ளை கொண்டாய் திருடி
பிறை நெற்றி் மத்தியில்
என்னை முடித்து வைத்தாய் சுட்டி
விவாக வேள்விதனில்
நாம் இணைந்தது நேற்றடி
என்றும் என் சகம் நீயடி
சதகமும் உன்னோடு தானடி