தான் உறங்குகிறேன்
கடல் மீது வலசை போகும்
மிதக்கும் மரக்கிளை கிடைப்பதைப் போல.
தனியாய் புலம் பெயர்ந்து
உன்னிடம் சேரும் வரை
சுற்றி இருக்கும் அமைதி
அலைகடலா முழுமதியா?
எதை கொண்டு அளவிடுவேன்.
நீ இல்லா இருளில் இருக்கிறேன்
ஒளியெல்லாம் நீ!
எதை பற்றி எழுதினாலும்
என்னுள் நிரப்பும்
கவிதையெல்லாம் நீ!
உன் கைககளில் சேர
உறக்கமில்லாமல் காத்திருக்கிறேன்
காற்றில் குறைந்த
வாசமெல்லாம் நீ!
தீயின் குணம்
பிடித்த அனைத்தும் தனதாக்கி கொள்ளும்.
காகிதங்களின் குணம்
பிடித்தவைகளை தன் மேல் படிந்து கொள்ளும்.
நான் நீ என்னும் தீ பிடித்த காகிதம்
உன்னால் நானும் தீ ஆனேன்.
உனக்காகவே எழுதும் காகிதமும் ஆனேன்
இன்னும் நூறு எழுதுவேன்
என் காதல் தீராது...