Saturday 23 May 2020

கார்த்திக் டயல் செய்த எண்

ஒரு வேளை கார்த்திக் ஜெஸ்ஸியை கடந்து சென்றிருந்தால், அவன் எண்ணவோட்டம் என்னவாயிருத்திருக்கும் ......

ஜெஸ்ஸி -
நேற்று முடித்த நூல்
புள்ளி வைத்த வாக்கியம்
காதல் வேட்கும் கானல் நீர்
முழித்து வைத்த கனவு
எழுதாமற் வீசிய காகிதம்.

விலகி சென்றாய்
தனிமையில் உழுதேன்
நீ இல்லா பாதையில்
ஓர் அமைதி ஒளிந்திருக்கும்
உன் ஓசை அற்ற மௌனம்
என்னை எழ துரத்தியது
எழுதினேன் இன்னும் எழுதுகிறேன்.....

இதமாய் அவ்வபோது அணைத்த நிழல்
பின் வலியாய் உறங்காமல் துரத்தும்
உன்னிடம் காதல் யாசித்தால்
அதனுள் என் சுயம் இழப்பேன்
எத்தனை நாள் ஏமாற்றி கொள்வது?

நீயும் எந்நேரம் கடந்திருப்பாய்
கடந்து விட்டாய் என்பது
நான் ஏற்க மறுக்கும் உண்மை
நீ -ஓர் நிறைவுறா காதல் கடிதம்
தொலைந்த முகவரியுடன்
தொலயாத வினாக்களை
பெட்டகத்தினுள் வைத்திருக்கிறேன்
உன்னை திருத்தி எழுதும்
எண்ணம் மட்டும் தோன்றவேயில்லை.