சகடதின் சாளரம் ஓரம்
மெலிதாய் இழைந்தோடும்
இளவேனிற் சாறல்
நெரிசல் சிறையில்
சிக்குண்ட என் காடியின் எதிரே
குளிரின் இதமாய் போர்த்திட
ஒரு உடை ஈர் உடல்
பெரு மழை தவிர்த்திட
குடையினை தழுவிம் நாற் கரங்கள்
மற்றும்
காதலின் தடுமன் தீர
கணக்கில்லா முத்தங்கள்.
தனிமையின் துவீபமான
என் குறை தீர
கற்பனை தோழி ஒருத்தி வந்தாள்
தன்னை யாதென வியக்கும்
மாமல்லன் மனங்கவர் சிற்பமவள்.
ஏ தோழியே!
கற்பனை உலகில்
தன் பலம் தந்தாய்
உன் மொழி கேட்க
தன் மடல் உள்ளது என்றாய்
தனிமை என்றோர் மாயை
அது நம்மிடம் இல்லையென
கரம் கொடுத்தாய்
கணம் பொழுதும் உன்னொடென
கணை அளித்தாய்
நினைவில் எங்கே துறக்கிறாய்?
நித்தம் உன்னோடு வாழ்த்திட
அடைக்காக்கும் என் இரவுகள்
உன்னிடம் சொல்வதிற்கென
பல புனைவுகள் இருக்கிறது
உன்னிடம் தீர்த்து கொள்ள
பல யுத்தங்கள் இருக்கிறது
உன்னோடு களிக்க
பல அதிசயங்கள் இருக்கிறது.
மற்றோர் திகதி உன்னோடென்று
கனவில் மறக்கிறாய் நேற்றோடு
உன் சிறகு விரிய காத்திருக்கிறேன்
அரவணைத்து கொள்.