Thursday 29 September 2016

பிரியாவிடை(Farewell)

இருளின் முகம் பூசிய மாலை இரவில்
                                        என் தாரகை வழியனுப்பி வீடு சேர்ந்தேன்
இரவல் ஒளியில் மலரும் மல்லிகையென
                                        உன் நினைவுகளில் கவி எழுதிக்கொண்டிருந்தேன்.

உன் விழி தூறல் எதிர்பார்க்கும்
                                             பாலை நிலம் நான்
மலரும் பூக்கள் கேட்க துடிக்கும்
                                             பொன்வண்டின் ஓசை நீ

என்  மதி நீ மறைந்த உடன்
                                      மறைதிங்கள் வானம் ஆனது எம் மனது
உன்னுடன் கழித்த நொடிகளில் தொலைந்த
                                      தனிமையின் ஏழ்மை எம்மை தழுவிக்கொண்டது.

எம் கோயில் தீபம் மாறியதை அறியாது காத்திருக்கும்
                                      திரியின் மொட்டுகளுக்கு என்ன பதிலுரைப்பேன்?
நூலகத்தில் தொலைந்த கவிதைகளானேன்
                                     என்னை தேடி பொருளுரைக்கும் தோழி எங்கே?
வடிக்கின்ற வரிகள் மொழியில் தீர்ந்துவிடும்
                                     சொல்லாத வலிகளின் மௌனத்தை எங்கே தீர்ப்பது?

இதழ்கள் எத்தனை அழகாயினும்
                                      முட்கள் மேலாக மலர்வதில்லை பூக்கள்
வரிகள் எத்தனை வரைகினும்
                                     உன் கரையின் மேலாக ஒலிப்பதில்லை எம் கவிகள்
புறக்கணிதவர்களை புரிந்துகொள்ள சொல்கிறாய்
                                     எங்கே வாங்குவது புன்னகை பூத்த போலி முகங்கள்.

மௌனத்தில் அறையபெற்ற ஊமை விழிகளுக்கு
                                            விடைபெறும் வார்த்தை மொழிகள் வரவில்லை
மனதின் தொடு திரையில்
                                        கழிந்த நிழற்படங்களை ஓட்டிகொண்டிருக்கிறேன்
அங்கே வழிந்தோடும் கண்ணீற்கு
                                       கண்களின் பாதை அறியவில்லை              
நெடுத் தூரமாயினும் வார்த்தை தூது அனுப்பு
                                   கொஞ்ச நேரமாயினும் மலரட்டும் எம் ஆம்பல் மனது.



இரவல்- borrow
பாலை-desert
மறைதிங்கள்-New moon day
மொட்டு-blossom
தூது-message
ஆம்பல் -lilly




Tuesday 13 September 2016

காவேரி

குடகின் தலைமகள்
                              தென்னகம் வாழ மறுவீடு வந்தாள்
சோழர்களின் வீரம் செருக்கு
                              உனக்கு பூச்சூடி மகிழ்ந்தது ஆடிப்பெருக்கு
உன்னிடம் பிறந்தவள் ஆண்பொருனை
                               கரிகாலன் உனக்களித்த சீர் கல்லணை

இயற்கை அன்னை துகலுரித்து
                               மணல் அள்ளி கொண்டோம்
அதனால் கோபித்து கொண்டு
                              பிறந்த வீட்டில் தங்கினாய் நீ

இரு கரை மத்தியில்
                              ஒரு தலை காதலி காவேரி
இரு வீட்டின் நீர் வேறுபாட்டிற்கு
                          கல் வீசி பார்க்கிறது கலவரம்
கோபங்களின் கனல் வேட்கையில்
                தீயென பிகாவின் பூங்காமனங்கள் எரிக்கிறது

பன்மொழி பருகியும்
                             வேற்றுமை வண்ணம் தெரியாதவள் நீ
விளக்குடன் இயந்த தீபம் போல்
                             பிறந்த வீட்டை ஏங்குவது பெண்ணின் மனம்
பிரித்து வைக்கும் எண்ணமில்லை எமக்கு
                             புரிந்து கொள்வோம் பகிர்ந்துணர்வோடு
             

*பிகா  என்பது வட இந்தியாவில் நிலத்தை குறிக்கும் ஒரு சொல்லாகும்.

Wednesday 7 September 2016

ஒரு மணி துளி

நீ அமர்ந்த இடம் வெறுமையென
                  பின்னால் நிறைக்கும் மேக வர்ணம்
மண்ணில் எழும் வாசம்
                 காற்று தூண்டிலிட்ட அவள் சுவாசம்.

பிரியும் பொழுதினில்
                 என்ன சொல்வதென தெரியவில்லை உனக்கு
இமைகள் சுடும் கண்ணீற்கு
                 நில் என்று பாலமிடு போதும்.

எம் வார்த்தைகளுக்கு
                   வாடகை தாய் யாரென தேடுகிறார்கள்
வலி மிகும் இடங்கள் எழுதபடுவது
                  பாடல்களுக்கு மட்டுமல்ல பாவலனுக்கும் சேர்த்தே
அவர்கள் அறியாதது 
                 எம் வரிகள் அடையும் முகவரி நீயென.

மனதின் மேடையில்
               ஏனிந்த கரு நாடகம் பெண்ணே
மேடிட்ட பெண்ணருவி நீ
              என் குருதி பள்ளத்தாக்கினில் பாய்வது எப்போது
மண்ணில் காயும் முன்
              எனக்கென காத்திருக்கிறதா அந்த ஒரு மணி துளி.

Thursday 1 September 2016

The Enchanting Nights-மனதை மயக்கும் இரவுகள்

 Hi,

நண்பர் Bharat kumar எழுதிய "The Enchanting Nights" காதல் நாவலை படித்துக்கொண்டிருத்தேன். அவருடன் உரையாடும் பொழுது தான் அந்த நாவலை  திரைக்கதை வடிவில் எழுதியிருப்பதாக கூறினார்.

அத்திரைக்கதையின் நிகழ்வுகளை  ஓர் பாடலாக எழுதினால் எப்படியிருக்கும் என்கிற சிந்தனையில் விளைந்த வரிகள் இவை.

திரைக்கதைக்கு பாடல் எழுதும் முதல் முயற்சி இது , படித்து விட்டு கருத்துக்களை கூறவும்

Book link:(TheEnchantingNights)


வெள்ளி மறைந்து விண்மீன் காக்கும்
                                      மாலை நேரத்து நிறமாலை அவள்
தன்னை மறைத்தவளிடம்
                                     தன்னிலை மறந்தேன் நான்.

புற்களில் கண்டேன்
                                  அவள் ஆரம்
புரிந்து கொண்டேன்
               காதலின் முதல் அகரம்.

அவள் எழிலில் எழுந்து அயர்ந்தது
                                 புகைபடத்தின் ஒளி வெள்ளம்
தாரகை வடிவை கவியுரைக்க
                                 தூரிகை கரங்கள் வார்த்தை தேடின.

நெருங்கிய இரவுகளின் ஊசிமுனையில்
                               ஊன்றினேன் காதலின் விதையை.

உடற் பிணியின் காதல் பசியிற்கு
                               ஊண் அறியா காதலி.
குழம்பிய மனவெளியில்
                              கமர்ந்தாள் காதலின் இடைவெளி

காத தூரம் நிலையிருப்பினும்
                             அட்டிகை எழுப்பியது நங்கையின் ஓதம்.
கற் பூங்காவில் மன சிற்பம் வடித்தேன்
                                              காதலி கரம் கொண்டு

இரவின் பின்னணியில் இருமனம் சேர
                            இருளில் ஓளிர்ந்தது காதலின் கமலம்.


நிறமாலை-rainbow
ஆரம்/அட்டிகை -necklace
கமர் - பிளவு/ create a ridge
தாரகை/நங்கை - girl
ஓதம்- background noise
பிணி-disorder
ஊண்-food
கமலம்-lotus