நாம் இருவரும் கூடும்
இரவு பொழுதில்
என்னை விடுத்து
விளக்கை அணைக்க சொல்கிறார்
உன் தந்தை
செல்லமாய் உன்னை சீண்ட
சினம் கொண்டு நோக்காதே
நேரலையில் நெஞ்சில் காயம்
உன் மூக்குத்தி
முன் விழும் முடிகளை
பின் தள்ளி விடாதே
ஒதுங்கும் முடியில்
ஒளிந்திருக்கும் அழகால்
மூச்சு நின்று விடுகிறது
நெற்றியில் வைக்கும் குங்குமமாய்
குடியிருக்கும் இதயத்தை
அவ்வப்போது தீற்றாதே
இராமன் தொட்ட அகலிகையாய்
உயிர்ப்பிக்கிறது கவிதைகள்
மனதை சிறை கொண்ட
தனிப்பெண் உன்னை கவர
வார்த்தை தேடி தவிக்கிறது சிரை
படித்த உடன் பகிர மாட்டாய் மனதை
அலைப்பேசி அழைக்க காத்திருந்து
இம்முறை வலிக்கும் இதயம்
மறுமுறை உன்னை பார்க்கும் முன்
நூறு கவிதைகள் முடித்தாக வேண்டும்
எழுத்தையும் ஆணையும் சூடிய பின்
உன் விழியின் முன்
கூரிழந்து நிற்கும் என் எழுத்தாணி .
இரவு பொழுதில்
என்னை விடுத்து
விளக்கை அணைக்க சொல்கிறார்
உன் தந்தை
செல்லமாய் உன்னை சீண்ட
சினம் கொண்டு நோக்காதே
நேரலையில் நெஞ்சில் காயம்
உன் மூக்குத்தி
முன் விழும் முடிகளை
பின் தள்ளி விடாதே
ஒதுங்கும் முடியில்
ஒளிந்திருக்கும் அழகால்
மூச்சு நின்று விடுகிறது
நெற்றியில் வைக்கும் குங்குமமாய்
குடியிருக்கும் இதயத்தை
அவ்வப்போது தீற்றாதே
இராமன் தொட்ட அகலிகையாய்
உயிர்ப்பிக்கிறது கவிதைகள்
மனதை சிறை கொண்ட
தனிப்பெண் உன்னை கவர
வார்த்தை தேடி தவிக்கிறது சிரை
படித்த உடன் பகிர மாட்டாய் மனதை
அலைப்பேசி அழைக்க காத்திருந்து
இம்முறை வலிக்கும் இதயம்
மறுமுறை உன்னை பார்க்கும் முன்
நூறு கவிதைகள் முடித்தாக வேண்டும்
எழுத்தையும் ஆணையும் சூடிய பின்
உன் விழியின் முன்
கூரிழந்து நிற்கும் என் எழுத்தாணி .