Saturday 10 December 2022

அவள் கவிதை

 

ஒர் அமைதியான
அமெரிக்க நதியோர கிராமம்
குளிர்கால வரண்ட இரவில்
இல்லத்தின் தனிமை போக்க
ஊர் கூடி ஒளிவீசும்

எப்பொழுதும் மௌனம் வீசும்
அவள் முகம்
காட்டாறாய் உள்ளே அலைபாயும்
என் மனம்

யாம் இருவரும்
ஆற்றங்கரையில் அமர்ந்து
விரல் இடுக்கின் தேநீர் குடுவையில்
குளிர் போக்குகையில்
எதிர் இருக்கும் ஓடையின் நீளமாய்
அமைதி

எப்பொழுதும் அவள் தான் தொடங்குவாள்
"நீங்கள் கவிதை எழுதி
வெகு நாட்களாகிறது,
என் பிறந்தநாளன்று
வந்த வாழ்த்துகள்
உங்கள் கவிதையின் வரவையும் கேட்டன"

நான் சற்றே அமைதியாய்
"நானும் கொஞ்ச நாட்களாய்
தேடிக் கொண்டிருக்கிறேன்
என்னையும் கவிதைகளயும்"

அவள் இதழ் திறந்து கேட்கிறாள்
நான் இன்னும் துழாவி கொண்டிருக்கிறேன்
கவிதை நெருக்கமாய் வேண்டும்
ஆனால் கைவசம் இல்லை
திருட்டிலும் பழக்கம் இல்லை
அவள் இதயத்தை தவிர,
மேலும் என் எழுத்தின் முத்திரையாய்
அவள் பெயர் வேண்டும்

விசரம் தவிர்த்த தழுவலோடு
அவளை உச்சி முகர்த்து
நதியோரம் நடக்க அழைத்தேன்
அந்த இடைவெளி
கவிதை தந்துவிடும் ஓர் அவகாசமாய்

நேரம் தெரியாமல் நடந்தோம்
அவளிற்கு பசி வந்தது
இங்கு இன்னும் கவிதை வரவில்லை
மெதுவாய் அவளிடத்தில் சொன்னேன்
உனக்கு பிடித்த கவிதை
பிறகு சொல்கிறேன்
எனக்கு பிடித்த கவிதை
இப்பொழுது சொல்கிறேன்

அவளை அருகே அணைத்து
காதோரமாய் சொன்னேன்
"தீபிகா"


Tuesday 8 November 2022

Destiny

 हमको मिली हैं आज, ये घड़ियाँ नसीब से

जी भर के देख लीजिये हमको क़रीब से

फिर आपके नसीब में ये बात हो न हो

फिर इस जनम में मुलाक़ात हो न हो

~~ A Sufi poem

இந்நாளும் இந்நொடியும்

உன்னுடன் கழிக்க

ஆசிர்வதிக்கப்பட்டது.

என் கண்கள் வழியே

இதயத்தின் காதலை பார்.

பின்பொருநாளில்

இனி நம் இருவரின் வாழ்க்கையும்

ஒர் முறை ஒருசேருமோ?

அல்லது

இனி நாம் இருவரும்

அவரவர் பயணத்தில்

காணமற் போகலாமோ?

~~ சூபி கவிதை


Nov 2016

It's been a month since she got transferred to her hometown.

Food court coffee table was again empty.

Silence has became so loud than words.

I smiled at people while feeling empty inside.

Didnt took long time to realise that my soul has lost light, It lost "Her".

On the other end,she was busy her with her circle.Our lives have been drifting apart.

With Onsite travel closer,I was in a transition from a known friend to distant memory in few months like a snow melting away on a winter morning.

One fine night,I decided that I'll meet her just to let know she's still in my heart.After a usual customary phone call I told her I'm coming to meet her.

I don't know where she lived, how I'll be welcomed after the gap or What we would be conversing on that day. All that mattered is I shall be with her and that moment is mine.

Life hasn't prepared me for this moment but I have to take my chances.

On a Nov night, I drove 320Kms in 4.5hrs and met her first time at her home.

What we spoke that day didn't add to context but I met her, which then led to further interactions.

Destiny sometimes creates a window to be with closed ones or We spend moments with each other without realising how close they might become.

Lets not leave these moment to be closer with someone.

Thursday 18 August 2022

பயணம்

வானூர்திக் கழுகுகள்
வட்டமிடும் விமான நிலையம்

அதிகாலை குளித்து அவசரமாய் ஒப்பனை முடித்து நீண்ட தணிக்கையின் முடிவில் கிடைத்தது ஓர் இருக்கை.
தனியான முனையத்தில் செல்போன் இரைசல் இன்றி மனிதர்களின் தடகளின்றி

வரிகளை செதுக்குகிறேன் செல்ல வேண்டிய தூரம் இன்னும் நீளம்.
தோழமையாய் ஓர் கோப்பை இருப்பக்கமான காத்திருப்பு முகம் புதைக்கும் அலுப்பு போலியான வாழ்த்துரைகளின் சலிப்பு என கரைகளற்ற ஓடாயாய் நீள்கிறது.
எல்லா பயணங்களும் எதோ ஓர் எதிர்பார்ப்பையும் உரையாடலிற்கான ஒத்திகையையும் தன்னுள் புதைத்து வைத்துள்ளது.

கருவாசல் பயணத்தின் பின் முதன் முதலாய் இரயில் வாசம் மூச்சு விடும் புகைவண்டியின் மெல்லிய தாலாட்டு.

பின்னாளில் வந்த பேருந்துகள்

எம் நவீன பண்டைமாற்று தனிமையை பெற்றுக்கொண்டு கடனாய் குடுத்தன வரிகள்.
அரவணைக்கும் இருளில் அவளைப் போலவே கண்ணாம்பூச்சி காட்டி கடந்து செல்கின்றன கனவுகள்.


அருகருகே அமர்ந்தலும்

மனதருகே அவர் சொந்தமில்லை

தொலைவில் இருப்பவரை

அருகே அழைத்தாலும்

பேசிக் கொள்ள வார்த்தை அமைவதில்லை.


வார்த்தைகள் எல்லாம் தோற்பின்

கைக்குட்டையில் கண்ணீரை அடைத்து

பின் எப்பொழுதோ வரும் நாளை

எதிர்நோக்கி செல்கிறது

இன்றைய பயணம்.


வானூர்த்தி ஏறியவுடன் தாய் மடியின் கதகதப்பில் எனை சூழும் உறக்கம். எல்லா பயணங்களும் எங்கோ ஓரிடத்தில் முடியதான் வேண்டும் அவள் பாதங்களில் என் காதல் சேர்வது போல.

©Deepakbioinfo.blogspot.com


Thursday 11 August 2022

இரக்‌ஷா பந்தன்


அன்பு தங்கை மனோவிற்கு
தொலைவிலிருந்து
இன்னும்- தொலைந்திடாத 
அண்ணன் எழுதுவது.

அண்ணன் என்ற உரிமை
நானே எடுத்துக்கொண்டது
ஓர் சக பயணிப் போல்
நானும் தீபியும்
உங்களுடனே பயணிக்கிறோம்.

ஒரே அலைவரிசையில்
எதிர்பார்போடு
ஏற்றஇறக்கங்களை
அவரவர் பார்வையில்
கடப்பவர்களுக்கு
வார்த்தை பாலம் எதற்கு?

இரக்‌ஷா பந்தன் எனில்
பாதுகாப்பு பந்தமாம்
தங்களை பற்றி நினைக்கையில்
நான் இப்பந்ததை
எப்படி பாதுக்காப்பது என்றே
நிதம் எண்ணுகிறேன்.

நினைவில் நிற்கும்படி
தங்களிற்காக நான் ஏதும்
நின்றதில்லை.
உங்களின் தோழராக
உடன் அமர்ந்துக்
நினைவுகள் செதுக்கியதில்லை
சொல்லாலான வருத்தகளை
எம் ஆறுதல் சொல்
வருடியது இல்லை.

என் தங்கை பல்துறை செல்வி
கலை பொருட்களின் களஞ்சியம்
பயண தொகுப்பின் ஆவலர்
உன்குழாய் கானொளியில்
முளைத்த புதிய சிறகு
அனைத்திற்கும்
நான் தூரத்து பார்வையாளன்
கைதட்டல் கேட்கா தூரம்
ஆனால் உங்கள் திறமையை
நான் வியக்கா நாளில்லை.

ஓர் விடுமுறையின் பின்னிரவில்
விருப்ப  உணவு சமைத்து
கதை பேசும் காலம்
இன்னும் காத்திருக்கிறது.

செவி வழி செய்தியாகவே
உங்கள் பாதைகளையும்
தன்னம்பிக்கையும் அறிந்திருக்கிறேன்.

ஏங்கிய சில உறவுகள்
இன்னும் எனக்கு எட்டாக்கனி
ஒரு வேளை
இறைவன் இப்பிறவியில்
சகோதர வேடத்தை ஒத்திகையித்து
மறுப்பிறப்பிற்கு ஆயத்தம்
செய்கிறார் போலும்.

ஓர் சோதரனாய்
வாழ்ந்து எழுதிய இவ்வரிகள்
நான் பேச எண்ணிய
சொற்களின் தொகுப்பு.

என் தனிமை நேர எண்ணங்களும்
தீபியுடன் தேநீர் உரையாடலும்
தங்களிர்கான நன்றியுரை
நலம் வாழ்த்தும் கலந்திருக்கும்.

பந்தினுள் காற்றினை போல் உறவுகளை உள்ளத்தினுள் அடைத்திட முடியாது
நான் எழுதியதை
உங்களிடம் ஓர்
அலைபேசி அழைப்பினில்
கடத்தி இருக்கலாம்.

என் மனம் ஓர் தனிமை நாட்குறிப்பு
முகமறிந்து  அவர்தம் உடனிருக்கும்
மனோ இயல் அறியேன்.
மடல் எழுதும் முறை
இன்றும் இருந்தால்
தங்களிற்கும் இராகேஷ்ற்கும்
வார மடல் வரைந்திருப்பேன்.

காலங்கள் ஓடலாம்
மாற்றங்கள் பூக்கலாம்
பேசிய சொற்கள் கரையலாம்
இவ்வரிகள் என்றும் இங்கிருக்கும்
எம் மனதிலும் இருக்கும்
இனிய இரக்‌ஷா பந்தன்.







Wednesday 3 August 2022

இளன்

 

ஆஸ்டினின் புதிய சந்திரன்
சொட்டும் ஊற்றின் பொன்னிற ஓடை
பாயினில் தவிழும் கண்ணன்

எங்கள் இளங் கோவின் ராஜகுமாரன்.


பார் புகழும் கன்னக்குழி அரசன்

பாலகன் அவன்- கரங்கள் நீட்டிய

மிகு வெண் நிலவழகன்

மடியில் கிடத்தி

வெண் சுதா ஊண்டபின்

ஆழ் துயில் கொள்வான்.


புன்னகை இழையோடிய இழன்.

சிந்தை கூர்மையால்

துன்பங்கள் இலன்.

பாரதியின் தமிழ் ஊட்டி

பாட்டன் கைககளில் தவழும்

எங்கள் செல்ல இளன்