ஆஸ்டினின் புதிய சந்திரன்
சொட்டும் ஊற்றின் பொன்னிற ஓடை
பாயினில் தவிழும் கண்ணன்
எங்கள் இளங் கோவின் ராஜகுமாரன்.
பார் புகழும் கன்னக்குழி அரசன்
பாலகன் அவன்- கரங்கள் நீட்டிய
மிகு வெண் நிலவழகன்
மடியில் கிடத்தி
வெண் சுதா ஊண்டபின்
ஆழ் துயில் கொள்வான்.
புன்னகை இழையோடிய இழன்.
சிந்தை கூர்மையால்
துன்பங்கள் இலன்.
பாரதியின் தமிழ் ஊட்டி
பாட்டன் கைககளில் தவழும்
எங்கள் செல்ல இளன்
No comments:
Post a Comment