Wednesday 20 December 2017

AMD (அன்பின் மடல் -தீபிகா )

யாரும் அனுகிடா issue வென தனித்திருத்தேன்
நீ என் SO(U)LMAN என
இது வரையில் எப்பெண் சொல்லி கேட்டதில்லை
காதலின் கால் தவத்தினை கடவுளிற்கு escalate செய்தேன்
என்னை உனக்கு assign செய்தார்.

மே மாதம் மனதின் சேர்மானம்
ஜவ்வரிசி சிரிப்பழகியின் உள்ளம் சேர்ந்திடும்
GRC தேடல் இன்னும் ஓயவில்லை
பல வருடம் develop செய்தும்
உள்ளத்தை காட்ட test case இன்றி தவித்தேன்
compliance இல்லா CAB-ஆய் இசைந்தாய் நன்றி.

என் செல்லம் ஆய்ந்திடும் appraisal ற்கு
விடை சொல்லும் resolution என்னிடமில்லை
அவள் கரம் பிடித்த நொடியில்
இனி வரும் காலம் task அனைத்தும் எனதாகும்.

உடனில்லா காலை கொடும் பகல் குளிர் இரவென
முக்காலம் 3 Reminder-யாய் உன் பிரிவு சுடுகிறது
உன் முத்தங்கள் கொள்வதற்கென
இதயத்தின் sharepoint இன்னும் காலியாய் கிடக்கிறது
ரண்(ம்)தீர என் காயங்களில் முத்தமிடு போதும்.

உனக்கும் எனக்கும் பிணக்கெனில்
உடலோடு நிழல்யென ஒட்டிகொள்
problem ticket-ல் காலத்தை கழித்து விட்டு
முதல் படியில் நிற்க விரும்பவில்லை
இதழ் இரெண்டும் சேர்ந்த பின்
புதிதாய் இனி rootcause  எதற்கு?
உன் புன்னகை தேசதிற்கென
நான் roadmap செதுக்கிக்கொண்டிருக்கிறேன்.

மகேந்திரனிடம் அடை கொண்டிருந்த விக்கிரகமே
என்னோடு சம்மதித்து இந்த VDI-யில் connect ஆவாயா
அயல்நாட்டில் தவித்திடும் இப்பறவைக்கு
உன் உள்ளத்தினுள் நுழையும் VPN passcode சொல்லடி

இந்த sandalwood அழகிற்கு
redwood-ஆய் நில்லாமல் பணி செய்திடுவேன்
Service now-ஆக உடனிருந்து
உன் சேவைகள் ஏற்க முயல்வேன்.

Outlook-உம் அழகும் ஓர் நாள் ஓய்ந்திடும்
ஆனால் நம் காதலின் நேசம்
காலமும் அறிந்திடா SLA தூரம்
தீ நம்மை பிரிக்கும் வரை
வாழ்க்கையோடு fire fighter ஆக போராடுவோம்.

Monday 4 December 2017

கேளடி கண்மணி

கருவறை சுமந்த கதைகள் அறிவாய்
ஓர் மாலையிரவின் நீல உடையில்
நம் தோள் உரசிய நினைவுகள் உண்டு அறிவாயா?
நிலம் கொண்ட காதலுக்காக
அலைகள் கரையினில் ஓய்வதில்லை
பேசாத தருணத்தையும் திறக்காத மனதையும்
மோதிப் பார்க்கும் சீற்றத்தோடு
காதல் நோயில் இரவினை கடக்கிறேன்
என் கண்மணிகென அவை கடலினுள் உறங்குதடி

நீ பிறந்த நொடியில் அழுதது போதும்
ஆறுதல் வேண்டிய அக்கணம் இருப்பேன்
வலிகளின் மறைபொருள் நானெனில்
மறுபிறவி எடுத்தேனும்
இறைவி கண்ணீர் துடைப்பேன்

புன்சிரிப்பில் நீ காணும் கனவில்
காலத்தில் துளையிட்டு
உன் புருவந்தன்னில் போரிட்டு
நெற்றி தழும்பினில் நீர் வழிய
கண்ணீர் முத்தமிட வேண்டும்

நீ கொண்ட காதலிற்கு
நிறை என்று பதிந்திட முத்தங்கள் போதாது
உன்னோடு பேசும் கதைகளுக்கு
இந்த ஓர் வாழ்க்கை போதாது
என்னை விற்றாலும் அக்கடன் தீராது
எதனை கொண்டு ஈடு செய்வேன் உன் இதயத்திற்கு?

உன்னுடைய உரிமையென
என் அனைத்தும் ஆன பின்
தனியே தருவதற்கு என்னிடம் ஏது?
அன்பெனும் அடைமொழிக்கு
வழியெங்கும் ரோஜாக்கள் நட்டிருக்கிறேன்
என்றோ ஓர் நாள் திரும்புகையில்
நீ புன்னகைப்பாய் போதும் .

Saturday 2 December 2017

இணை

காதில் வளையமிட்டு
கன்னத்தில் கை வைத்து
கருங்கூந்தல் முத்தமிட்ட அழகே
பசும்போர்வையும் உன் பச்சிளம் புன்னகை முன்
கூச்சம் கொண்டு மறைந்தனவோ
உன் எழிலில் கரையுமென தடுப்பினை கொண்டதோ

இதயத்தின் கடவுச் சொல்லினை
காதலின் வழியே களவு கொண்டவளே
தன்னை இழந்து நீயும் அற்ற
ஒர் உலகில் இருந்து கேட்கிறேன்

"எனக்காக திறக்க மறுத்த
பல மனதின் வாசல்களில் தோற்றுவிட்டேன்
கணவனாக என் பெயர் எழுதி
இது நாள் தழுவிடாத
தாமரை கரங்களில் சிறையிடுவாயா?
உன் மேல் மையல் கொண்டவனை
"தை"யல் மருந்திடுவாயா?"

கன்னம் சிவந்து நாணம் கொள்ளும்
மயக்க மொழி அறியேன்
உன் குல பெண்கள் ஒயாஐயறும்
இலக்கண கணவனாய் நான் அறியேன்
கண் பேசி கவர்ந்திடும் கலையும் அறியேன்
என்பேசி உன்னை மணந்திட
மனம் வீசி காத்திருக்கும் ஏழை காதல்வாசி நான்

பனியில் தவித்திடும் இப்பனிப்பாடிக்கு
திங்களும் சுடுகிறது
தென்றல் கலவி கொள்ளும் அதிகாலையில்
கட்டிலில் மாரணைத்து உறக்கம் கொள்
நீரற்ற இந்த நீல நையில் நதி
உன் வெள்ளி மயில் காதோரம் உயிர் பெறும்