Monday 4 December 2017

கேளடி கண்மணி

கருவறை சுமந்த கதைகள் அறிவாய்
ஓர் மாலையிரவின் நீல உடையில்
நம் தோள் உரசிய நினைவுகள் உண்டு அறிவாயா?
நிலம் கொண்ட காதலுக்காக
அலைகள் கரையினில் ஓய்வதில்லை
பேசாத தருணத்தையும் திறக்காத மனதையும்
மோதிப் பார்க்கும் சீற்றத்தோடு
காதல் நோயில் இரவினை கடக்கிறேன்
என் கண்மணிகென அவை கடலினுள் உறங்குதடி

நீ பிறந்த நொடியில் அழுதது போதும்
ஆறுதல் வேண்டிய அக்கணம் இருப்பேன்
வலிகளின் மறைபொருள் நானெனில்
மறுபிறவி எடுத்தேனும்
இறைவி கண்ணீர் துடைப்பேன்

புன்சிரிப்பில் நீ காணும் கனவில்
காலத்தில் துளையிட்டு
உன் புருவந்தன்னில் போரிட்டு
நெற்றி தழும்பினில் நீர் வழிய
கண்ணீர் முத்தமிட வேண்டும்

நீ கொண்ட காதலிற்கு
நிறை என்று பதிந்திட முத்தங்கள் போதாது
உன்னோடு பேசும் கதைகளுக்கு
இந்த ஓர் வாழ்க்கை போதாது
என்னை விற்றாலும் அக்கடன் தீராது
எதனை கொண்டு ஈடு செய்வேன் உன் இதயத்திற்கு?

உன்னுடைய உரிமையென
என் அனைத்தும் ஆன பின்
தனியே தருவதற்கு என்னிடம் ஏது?
அன்பெனும் அடைமொழிக்கு
வழியெங்கும் ரோஜாக்கள் நட்டிருக்கிறேன்
என்றோ ஓர் நாள் திரும்புகையில்
நீ புன்னகைப்பாய் போதும் .

No comments:

Post a Comment