Saturday 2 December 2017

இணை

காதில் வளையமிட்டு
கன்னத்தில் கை வைத்து
கருங்கூந்தல் முத்தமிட்ட அழகே
பசும்போர்வையும் உன் பச்சிளம் புன்னகை முன்
கூச்சம் கொண்டு மறைந்தனவோ
உன் எழிலில் கரையுமென தடுப்பினை கொண்டதோ

இதயத்தின் கடவுச் சொல்லினை
காதலின் வழியே களவு கொண்டவளே
தன்னை இழந்து நீயும் அற்ற
ஒர் உலகில் இருந்து கேட்கிறேன்

"எனக்காக திறக்க மறுத்த
பல மனதின் வாசல்களில் தோற்றுவிட்டேன்
கணவனாக என் பெயர் எழுதி
இது நாள் தழுவிடாத
தாமரை கரங்களில் சிறையிடுவாயா?
உன் மேல் மையல் கொண்டவனை
"தை"யல் மருந்திடுவாயா?"

கன்னம் சிவந்து நாணம் கொள்ளும்
மயக்க மொழி அறியேன்
உன் குல பெண்கள் ஒயாஐயறும்
இலக்கண கணவனாய் நான் அறியேன்
கண் பேசி கவர்ந்திடும் கலையும் அறியேன்
என்பேசி உன்னை மணந்திட
மனம் வீசி காத்திருக்கும் ஏழை காதல்வாசி நான்

பனியில் தவித்திடும் இப்பனிப்பாடிக்கு
திங்களும் சுடுகிறது
தென்றல் கலவி கொள்ளும் அதிகாலையில்
கட்டிலில் மாரணைத்து உறக்கம் கொள்
நீரற்ற இந்த நீல நையில் நதி
உன் வெள்ளி மயில் காதோரம் உயிர் பெறும்

No comments:

Post a Comment