அதிகாலை குளித்து
அவசரமாய் ஒப்பனை முடித்து
நீண்ட தணிக்கையின் முடிவில்
கிடைத்தது ஓர் இருக்கை.
தனியான முனையத்தில்
செல்போன் இரைசல் இன்றி
மனிதர்களின் தடகளின்றி
வரிகளை செதுக்குகிறேன்
செல்ல வேண்டிய தூரம்
இன்னும் நீளம்.
தோழமையாய் ஓர் கோப்பை
இருப்பக்கமான காத்திருப்பு
முகம் புதைக்கும் அலுப்பு
போலியான வாழ்த்துரைகளின் சலிப்பு
என கரைகளற்ற ஓடாயாய் நீள்கிறது.
எல்லா பயணங்களும்
எதோ ஓர் எதிர்பார்ப்பையும்
உரையாடலிற்கான ஒத்திகையையும்
தன்னுள் புதைத்து வைத்துள்ளது.
கருவாசல் பயணத்தின் பின்
முதன் முதலாய் இரயில் வாசம்
மூச்சு விடும் புகைவண்டியின்
மெல்லிய தாலாட்டு.
பின்னாளில் வந்த பேருந்துகள்
எம் நவீன பண்டைமாற்று
தனிமையை பெற்றுக்கொண்டு
கடனாய் குடுத்தன வரிகள்.
அரவணைக்கும் இருளில்
அவளைப் போலவே
கண்ணாம்பூச்சி காட்டி
கடந்து செல்கின்றன கனவுகள்.
அருகருகே அமர்ந்தலும்
மனதருகே அவர் சொந்தமில்லை
தொலைவில் இருப்பவரை
அருகே அழைத்தாலும்
பேசிக் கொள்ள வார்த்தை அமைவதில்லை.
வார்த்தைகள் எல்லாம் தோற்பின்
கைக்குட்டையில் கண்ணீரை அடைத்து
பின் எப்பொழுதோ வரும் நாளை
எதிர்நோக்கி செல்கிறது
இன்றைய பயணம்.
வானூர்த்தி ஏறியவுடன்
தாய் மடியின் கதகதப்பில்
எனை சூழும் உறக்கம்.
எல்லா பயணங்களும்
எங்கோ ஓரிடத்தில் முடியதான் வேண்டும்
அவள் பாதங்களில்
என் காதல் சேர்வது போல.
©Deepakbioinfo.blogspot.com