தூரத்து அலையோசை
இரவு பயணம்
கைப்பேசியை தீண்டி
மீண்டும் மீண்டும் பார்கிறேன்.
உன் பெயர் இல்லை
உன் குரல் இல்லை
உன் கண்கள் இல்லை
உயிரற்ற வெளிச்சத்திரை மட்டுமே.
இந்த தனிமையில்
நான் மட்டுமே நனைகிறேனா?
தோள் வேண்டாம்
இந்த இருளின் குரலிற்கு
கேட்கும் செவியும் இல்லயா?
காலையும் மாலையும்
காதலாய் காத்திருந்தேன்
என் வலிகள் உனக்கோர் பொருடல்லயா?
நீ விலக விழையும்
தூரம் செல்கிறேன்
இம்முறை உனக்கென
கண்ணீர் சிந்த போவதில்லை
உன்னை நினைத்து
நாட்களை கிழிக்க மாட்டேன்
உன் அன்பை பெற
பலமுறை தோற்றுவிட்டேன்
இதுவரை கேட்காத இதயம்
இனியும் திறந்திடுமா என்ன?
உன் நினைவுகளுக்கு நன்றி
இந்த இடத்தில் உன்னை நிறுத்திவிட்டு
விலகி செல்கிறேன் புது விதையாய்
காலம் உருண்டோடும்
மீண்டும் ஓர் வசந்த காலம் வரும்
அன்று என் நனைவில்
கரிதுகளாய் கரைந்திருப்பாய்.