Sunday 24 March 2024

புல்லாங்குழல்


நீ அற்ற உரையாடல்கள் ஏனோ சலிக்கிறது

இங்கு நானாக படுக்கையில் எழுகிறேன்

இல்லை ஏதேனும் ஒன்றாக இருக்கிறேன்

சோழரோ உடையரோ எவர் நிலம் ஆயினும்

எனை ஆளும் காதல் தேசம் நீ.


கதவடைத்தக் கூடு எம்மனம்

எத்தனை முயன்றாலும்

பெண் பறவை அன்றி -

அன்றில் ஓசை இங்கு ஒலிக்காது.


என் சுயமியின் உருவம் நீ

இப்பொழுது பயணம் பிடிக்கவில்லை

உணவு வேளை தெரியவில்லை

இறகினை போல் காலத்தில் விழுகிறேன்

ஏதோ ஞாபகம் இல்லா வரிகள்

உன்னை பற்றி விழுந்து கொண்டிருக்கும்.


தீ பொறியென நீயாக பேசு என சொல்லாதே

பிடித்தமான குளிர் காற்று நான்

காற்று என்றும் மவுனம் கலைவதில்லை

புல்லாங்குழலில் புகும் வரை.

No comments:

Post a Comment