நீ அற்ற உரையாடல்கள் ஏனோ சலிக்கிறது
இங்கு நானாக படுக்கையில் எழுகிறேன்
இல்லை ஏதேனும் ஒன்றாக இருக்கிறேன்
சோழரோ உடையரோ எவர் நிலம் ஆயினும்
எனை ஆளும் காதல் தேசம் நீ.
கதவடைத்தக் கூடு எம்மனம்
எத்தனை முயன்றாலும்
பெண் பறவை அன்றி -
அன்றில் ஓசை இங்கு ஒலிக்காது.
என் சுயமியின் உருவம் நீ
இப்பொழுது பயணம் பிடிக்கவில்லை
உணவு வேளை தெரியவில்லை
இறகினை போல் காலத்தில் விழுகிறேன்
ஏதோ ஞாபகம் இல்லா வரிகள்
உன்னை பற்றி விழுந்து கொண்டிருக்கும்.
தீ பொறியென நீயாக பேசு என சொல்லாதே
பிடித்தமான குளிர் காற்று நான்
காற்று என்றும் மவுனம் கலைவதில்லை
புல்லாங்குழலில் புகும் வரை.
No comments:
Post a Comment