Thursday 6 July 2017

பேசாமொழி

மரணத்தின் வலி யாதென
அறிவாயா தோழி
மௌனத்தின் பிறப்பிடம்
நீ அற்ற வெற்றிடம்.

ஆற்றங்கரை மணல் முழுதும்
நம் காதல் எழுதியிருந்தேன்
தண்ணீரில் நனைவது போல்
(உன்) அலட்சியம் அத்தனையும் அழிக்கிறதே.

எனக்கென்று மட்டும் உணர்வுகள் இல்லையா
என தடுத்திடாதே தலைவி
கான் கடந்து கண்ணீரும் வற்றி
பாலையில் காய்ந்து கொண்டிருக்கிறேன்
என்னிடம் இதற்கு மேல் வார்த்தைகள் இல்லை
எனக்கென்று பேசிட
உன் கெடிகார முட்களுக்கும் நேரமில்லை.

தீயில் முடிவதல்ல மரணம்
பிரிந்து செல்லென தலைவியில் மொழியில்
காத்திருக்கிறேன் இறுதி வரை
தோழனாக தலைவனாக கணவனாக
என்றோ ஓர் நாள் உனக்கு புரியுமென!

காத்திருக்கும் பொழுதினில்
காலன் என்னை கொண்டு விட்டால்
என் கல்லறையிலேனும்
கொஞ்சம் மனம் விட்டு பேசிசெல்

No comments:

Post a Comment