Monday 26 June 2017

துணைவி

தீது அறியா சிறியவள்
பிறந்த மழலை நகையுடை இனியவள்
காத்திருக்கா மனமே
இனியெல்லாம் அவள்.

யாரும் அருகா எரிமலை சிகரமவள்
எனக்காய் மட்டும் நிலவாய் குளிர்பவள்
இதயத்தில் தலை சாய்த்து
இமை கொண்டு
காதல் கணை தொடுப்பவள்
இருள் சூழ்ந்த மனதிற்கு
இல்லற தீபமாய் ஒளிர்பவள்.

கவிதையின் மறு வரியாய்
உயிரின் மறு பாதியாய்
அவளது நினைவுகள் இங்கே!!
மண முடித்த நன்நாளில்
சுடும் பகலை வீட்டிற்கு அனுப்பி
அவள் புடவை தலைப்பினில்
உறங்கிடும் மாலையும் எங்கே??
இங்கனம்
அவ்விரவு விடிய காத்திருக்கும்
வருங்கால கணவன்

No comments:

Post a Comment