காதலி உறங்கும் இரவே
உன் அருகே படுத்திருந்தால்
தேவதைகளின் துயில்
எத்தனை அழகென அறிந்திருப்பேன்
உறக்கத்தில் உன்னோடு பேச
நான் அனுப்பும் காதல் முத்தங்கள்
உன்னை தொட்டு விட தயங்கி
என்னுள் புதைகிறது மன அழுத்தமாய்
காதலியே உனக்காய் காத்திருந்து
என் பகல் முழுதும்
உனது இரவை விட கருமையாய்
ஊமையின் வலியாய் உடைக்கிறது
உறக்கத்தில் என்னை எழுப்பி
இரவுத்தோறும் உரையாடு என்பாய்
காதலி விழிகள் மல்லிகை மொட்டுகள்
எங்ஙனம் அவிழ செய்வேன் நான்?
மழை நீர் சீண்டினால்
என் உறைக்குள் உன்னை போர்த்துவேன்
ஒவ்வொரு இரவும்
உன் விழி நீர்
சங்கமிக்கும் காரணி நான்
முகப்பருவாய் உன்னோடு இருந்து வலிக்கிறேன்
என் காதலின் பயன் தான் என்னவோ?
உலகத்தின் காதலர்கள்
அவர்தம் துணைக்கு முத்தமிடுகையில்
என் காதலிகென எங்கோ அமர்ந்து
பொருள் தொலைத்த கவிதைகள் தொகுக்கிறேன்
உன் மனதை தொட
பொருள் வேண்டாம்
காதலியின் அருள் பெற
என்ன தவம் வேண்டும்?
என்னை கொல்லும் தனிமையும்
உணவற்று கிடைக்கும் பணமும்
நீ அழைத்த மறுகணம்
வீசி விட்டு வருகிறேன்
உன் மடியில் வாழும் அந்நொடி
சொர்க்கம் கூட வேண்டாம் எனக்கு
என்னும் என் மனம்
உனக்கு அறியா வேறு மொழியா?
உன் இதயம் இதை புரியாதெனில்
என்னை அழைத்திடும் வாசல் ஏது?
என் காதலியின் மனம் ஏற
நிழற்குடையில் காத்திருக்கிறேன்
சீக்கிரம் வந்து என்னை அணைத்துக் கொள்.
உன் அருகே படுத்திருந்தால்
தேவதைகளின் துயில்
எத்தனை அழகென அறிந்திருப்பேன்
உறக்கத்தில் உன்னோடு பேச
நான் அனுப்பும் காதல் முத்தங்கள்
உன்னை தொட்டு விட தயங்கி
என்னுள் புதைகிறது மன அழுத்தமாய்
காதலியே உனக்காய் காத்திருந்து
என் பகல் முழுதும்
உனது இரவை விட கருமையாய்
ஊமையின் வலியாய் உடைக்கிறது
உறக்கத்தில் என்னை எழுப்பி
இரவுத்தோறும் உரையாடு என்பாய்
காதலி விழிகள் மல்லிகை மொட்டுகள்
எங்ஙனம் அவிழ செய்வேன் நான்?
மழை நீர் சீண்டினால்
என் உறைக்குள் உன்னை போர்த்துவேன்
ஒவ்வொரு இரவும்
உன் விழி நீர்
சங்கமிக்கும் காரணி நான்
முகப்பருவாய் உன்னோடு இருந்து வலிக்கிறேன்
என் காதலின் பயன் தான் என்னவோ?
உலகத்தின் காதலர்கள்
அவர்தம் துணைக்கு முத்தமிடுகையில்
என் காதலிகென எங்கோ அமர்ந்து
பொருள் தொலைத்த கவிதைகள் தொகுக்கிறேன்
உன் மனதை தொட
பொருள் வேண்டாம்
காதலியின் அருள் பெற
என்ன தவம் வேண்டும்?
என்னை கொல்லும் தனிமையும்
உணவற்று கிடைக்கும் பணமும்
நீ அழைத்த மறுகணம்
வீசி விட்டு வருகிறேன்
உன் மடியில் வாழும் அந்நொடி
சொர்க்கம் கூட வேண்டாம் எனக்கு
என்னும் என் மனம்
உனக்கு அறியா வேறு மொழியா?
உன் இதயம் இதை புரியாதெனில்
என்னை அழைத்திடும் வாசல் ஏது?
என் காதலியின் மனம் ஏற
நிழற்குடையில் காத்திருக்கிறேன்
சீக்கிரம் வந்து என்னை அணைத்துக் கொள்.
No comments:
Post a Comment