Monday 19 February 2018

நினைவுப் பேழை

காதலில் தான் எத்தனை நினைவுகள்
முதல் நாள் உடை என்ன?
இன்று காதலில் என்ன நிகழ்ந்தது?
எப்பொழுது ஊடல் கொண்டோம்?
அத்துணை நினைவுகளும்
காதலரோடு அழிகிறது
கணிணி போன்றே காதலும் மாறுகிறது.

முந்தைய காதல்-
பழகு, காதலி, கரம் கோர்த்து கொள்
மணம் செய், நிலவிற்கு செல்
கலவி கொள், குழந்தை பெற்றிடு
பணம் சேர், பெற்றதை கரை சேர்
மாழை இழந்து ஓர் நாள் மடிந்திடு.

துணை கொண்டவள் காதலை
முகநூல் முத்தத்தோடு நிறுத்திடு
நான்கு லைக் வாங்கி
நாலு கோடி பேரில் கலந்திடு.

பிந்தைய காதல்-
பார், பிடித்திடு
மறைவாய் முத்தமிடு
கலைத்திடு பின் கலைந்து விடு
முறித்து முகநூல் பதிவிடு
கொஞ்ச நாளில் வேற்று பெண்ணிற்கு மாறிடு.

ஆண்டுகள் கடந்தும்
உறங்கும் காதல்-தாஜ்மஹால்
பிரிந்து வாழும் காதல்- சலீம் அனார்க்கலி
பிரிவிலும் சேர்ந்த காதல்-நள தமயந்தி
நாம் கொண்ட காதலும் சிறிதில்லை
கல்வெட்டில் பதிந்திட சோழனில்லை
காலத்தில் நிறுத்திட கம்பனில்லை

என்னை உருமாற்றி
நீ உருகிய காதலை
நின்று முத்தமிட்டு
நூறு பாடல் பூச்சூட வேண்டும் என் அமராவதிக்கு.

உன்னை பிரிந்து வாழும் ஒவ்வொரு நொடியும்
சிரம் போன்று ஒற்றையாய் வலிக்கிறது இதயம்
இந்த காதலும் அன்பும்
வாழ்வின் நீரோடையில் மறையாது
அகவை கடந்த பின்னும்
ஓர் மாலை நேரத்து மையல் தருணம்
தீ பிங்கமென காதலி முகம் ஒளிர
அவளிற்காய் வரைகிறேன்
அருமன் தேன் துளிகளை.

கவிதையின் பின்குறிப்பு:
நான் உன்னை காதலிக்கிறேன்

No comments:

Post a Comment