Monday 26 February 2018

பிப்ரவரி 25

ஏதோ ஒரு பாடலும்
நம் புகைப்படமும்
இங்கே வீசி செல்ல எண்ணம்
ஆனால் என்னை முழுதாய் கொண்டு
மூச்சிரைத்த நாளை
இன்னொரு நினைவில் படைப்பதாய் எண்ணமில்லை.

மீண்டும் ஒரு முறை அல்ல
இறுதி முறையாய் - அந்த காதல் பார்வையை
பார்த்துவிட்டு பறந்திட வந்தேன்
உன்னை மணப்பெண் ஆக்கிட
வீட்டில் நடப்பதை அறிவேன்.

செங்கோடு கருப்பு வெள்ளையில் நின்றிருக்க
அங்கே நீல வானின் தேவதை இறங்கி வந்தாள்
உன் எண்ணம் உடை தேர்வில் இருக்க
நான் உன் உரியவனென தெரிவாக துடித்தேன்.

அந்த சாலை ஓர கடைகள் அலைந்தோம்
உன் கைகள் பற்றிடும் தொலைவு வரை நடந்தேன்
வழியில் என்ன கடந்தேன் தெரியவில்லை.

அத்தனை கோடை உன் மேல் பாய்ந்திட
புது மலரென நீ சிரிக்க
உன்னை பார்த்து கொண்டே யாவும் மறந்தேன் நான்
நீ சிரிக்கும் பொழுதினில்
இதயம் உறைந்திருக்க
தாமிய கணம் தீண்டிய சிகையில்
மீண்டும் மீண்டும்
காதலாகி விழுந்தேன் நான்.

இத்தனை நாள் முயன்றும்
எந்த காதலும் பொருந்தவில்லை
கருடன் இட்ட மாலையென
அறிதாய் ஓர் இதயம் திறந்தேன்
உன்னை அன்றி வேற்றோர் பெண்ணை விரும்பவில்லை.

இன்று நீயும் நானும் காதல் பேச
மத்தியில் அமர்ந்து தோள் சாய
என்னிடம் அருகாமை இல்லை
நீ என் மொழி
உன்னிடம் கவிதை கொள்ள வருவேன்
இன்னும் பல தனிமை கடந்து
என்னோடு நீ இருப்பாய் காத்திருப்பேன்.

2 comments: