Friday 9 February 2018

காதலடி உன் மேல்

இன்று காதல் அறிவி தினம்
பெண்ணருவி உன்னில் தான் எத்தனை நீரடி
அதனுள் முழ்கிட காத்திருக்கிறேன்
-கடற் தாண்டி
ஒடையில் வழிந்தோடும் தாமரை இலையென
உன் நீரில் என்னை தவழ்ந்திடடி கண்மணி
அகன்ற வாய்காலில் மீன்கள் துள்ளிடும்
உன் விண்மீன் விழியில்
என் வாழ்க்கை துளிர்விடும்

கண்கள் தூரம் கடந்து
கனவுகளில் விழித்திருக்கிறேன்
அழகிய நினைவுகளின் கூடை சுமந்து
மயிலிறகால் கீச்சங் கீதாஞ்சலி இசைத்து
மீத முத்தம் முடியும் முன்
கண்ணுறங்க செல்கிறாய்
தொடர்பற்ற பொழுதினில்
இதழ் பற்றாது தொலைகிறேன் என்னை தேடடி

காதல் சின்னங்கள் தன் பால்
இதயம் மொழிவதில்லை
பார்வையற்ற வீணை மீட்க
இசையின் தாகம் வேண்டிடுமா?

இந்நாளில் உன் முகம் தாங்கி
மலர் கொற்றையில் கன்னம் தழுவி
தீ பிழம்பின் காலடியில்
உறங்கிடும் பனித்துளியென
உன் மடியில் உலகம் மறந்திட வேண்டும்
மழலைகள் பல கொண்ட பின்னும்
உனக்கென கவிதைகள் வரைந்திட வேண்டும்
என்னோடு காதலில் கூடடி
முழுமை நீயென வாழ்ந்திட வேண்டும்

No comments:

Post a Comment