Sunday 8 July 2018

நானுற்றி பன்னிரண்டு முத்தம்

உறக்கத்தில் எழுந்து என்னிடம்
முத்தம் கேட்கிறாய் தேவதையே
படுக்கையில் உன்னை அணைக்க
அடுத்து நான் இல்லை காதலியே.

துணையில்லாத வறியவன் நான்
முத்தக் கொடை எங்ஙனம் புரிவேன்
எம் கண்ணீர் துளிகள்
உன்னை சீண்டாது
மனக் குடைனுள் மறைத்துக் கொள்கிறேன்.

உனக்காக மட்டும்
சிரிக்க தெரிந்த முகமிது
அதுவும் உன் கருப்பு வெள்ளை
இரட்டை ஜடை புகைப்படம் தருவது.

தீயே உன் தாகம் தீர்க்கா நீரிது
பிரிந்து வாழும் பிழையும் எனது
கார்த்திகை கன்னியே
கட்டிக்கொள் என்னை
கண்கள் மூடி உன்னுள் கலக்கிறேன்.

விரைவில் நம் மணநாள் வரும்
அன்றைய இரவு
நான் ஒன்று பதித்து
நீ ஒன்று பற்றி
இதழ் இரண்டும் பனித்து
மொத்தம் இடலாம்
நானுற்றி பன்னிரண்டு முத்தம்.

No comments:

Post a Comment