Monday, 2 July 2018

மருதாணி கை பிடிச்சு

என்னோடு இருக்கற ஒருத்தனுக்கு
ஒரு மாசம் மனைவி இல்லாம
உலகமே ஓய்ஞ்சிருச்சாம்
வெள்ளில பொறந்த என் தங்கம்
எப்போ என்னோட சேரும் தெரியலயே?

என் செவ்வாய் இதழழகிய
திங்கள் தாண்டி தீண்டலையே
கண்ணீரோட சாயம் காஞ்சி
கல்யாண சேலை வாங்கி
கையோடு அணைப்பதப்போ?

மருதாணி கை பிடிச்சு
மோதிரம் தான் இணைச்சு
கடலோட நான் வருவேன்னு
மீனராசிக்காரி கிட்ட சொல்லி வைச்சேன்
என்னும் நான்
மல்லிகை வைச்சிவிடலையே
மணக்க மணக்க
அவ வைச்சு சாப்பிடலையே.

உன் நெத்தி குங்குமத்துல
எத்தன சாமி நேந்திருக்கும்
எனக்காக தல சாய
உன் மெத்த முழிச்சிருக்கும்
என்னோட காத்து வாங்க
அத்தன கடலும் அலைமோதும்
நம்ம கல்யாண நேரந்தான்
கை சேறுர காலம் வருமா?

நித்தம் உசிரு போனாலும்
நினப்பெல்லாம் பெங்களுர்காரி மேலடி
நெஞ்செல்லாம் முள் தைக்குதடி
உன் முத்தம் ஒண்ணு போதுமடி
இந்த உலகத்தோட முகத்துல
என் மனசு ஒண்ணும் இல்லடி
நாளைக்கு நம்ம மவ சொல்லட்டும்
அப்பன் ஆத்தா காதல பத்தி.

No comments:

Post a Comment