Thursday 26 July 2018

அதிகாலை அழகே

குங்கும சிமிழே
புன்னகை தீற்றலே
அதிகாலை மலர்ந்தால் உன் முகம்.

மொழியற்ற ஊமைக்கு
கவிதையாய் வந்தாய்
நிறமற்ற தூறின் நுனியில்
வண்ணமாய் இருக்கிறாய்
கருப்பு வெள்ளை வாழ்க்கை
உன் காதல் சாறல் கேக்குதடி.

கனவில் தான் காதலியே
முத்தமிட வருவாயா
மூச்சிரைக்க அணைப்பாயா
சொல்லடி என் தேவதையே.

தினம் புதிதாய்
கண்கள் பறிக்க
வார்த்தை துளிர்க்குதடி
ஆனால் நாள் முடிவில்
மெல்லிய முக நெளிவில்
கற்பனை அனைத்தும் கலைத்து செல்கிறாய்.

எதை கொண்டு உன்னை காதலிக்க
வரி எழுதி ரசிப்பேனா
இல்லை
கானம் பாடி கவர்வேனா
சங்கீதாவே என் காதில் கூறடி.

இந்த காதல் தான்
உன்னை அணைக்க தள்ளுதடி
கட்டி கொண்ட கனம்
காலமும் வெட்கத்தில் உறையுதடி.

கனவில் தான் காதலியே
முத்தமிட வருவாயா
மூச்சிரைக்க அணைப்பாயா
சொல்லடி என் தேவதையே.

No comments:

Post a Comment