Saturday 28 July 2018

காதல் வேட்கை

"என்ன"
"ஒன்றுமில்லை"
"சரி அழைக்கிறேன்"
அளவிலா காதலின் ஆளுமையில்
அன்றைய பொழுதின் ஊடல்.

கண் காணா தொலைவெனில்
கணைகள் வீசி கொள்கிறோம்
சங்கீதா எனும் பொழுதினில்
சினம் எங்கே தொலைகிறது?

செடியாய் பிறந்திருந்தால்
மண்ணில் புதைந்து
மலரென பூத்து
மங்கையை சூடியிருப்பேன்
மனிதாய் பிறந்து
பிரிந்து வாழ்கிறேன்.

பாதம் வலித்திடும் பிணிவிலும்
கோதை காதல் கேக்குதடி.
எத்தனை தலையணை மாற்றுவது
எதுவும் உன் போல் அணைப்பதேயில்லை.

No comments:

Post a Comment