Tuesday 7 August 2018

நரவலி

நரவலி- Become weary or tired, as with waiting

இன்றும் வெறும் வானை
பார்த்தே கழிக்கிறேன்
எனக்கு இருள் படைத்த அதே வானம்
உன்னிடம் பகல் காட்டிச் சிரிக்கிறது.

இன்னும் எத்தனை திங்கள்
நீ இல்லா இரவொடு கழித்திட?
இன்று போய் நாளை வரும்
அதுவும் ஒர் தனிமையென கடந்திடும்.

உன் காதல் என்னை செதுக்காமலே
நித்தமும் உடைகிறேன் தெரிகிறதா?
தனிமை என்னை
மலையின் உச்சியிற்கு அழைக்கிறது
நான் விழுந்திட உன் பிரிவொன்று கொள்ளவா அன்பே?

நீ கொண்ட கண்ணீரின்  எளிதாய்
உன்னை காதல் கொள்ள முயன்று தோற்கிறேன்
சிதறி மண்ணில் விழுந்தேன்னெனில்
உன் கண்ணீராய் கலந்திட வேண்டுகிறேன்
கைகள் அதனை துடைக்கையில்
இந்த உயிரினை தாங்கிடு போதும்.

கண் பார்க்கும் காட்சி அனைத்தும்
நீ ரசிக்க வேண்டுமென, ஏனடி அடம் எனக்கு?
என்னோடு நீயும் இருப்பதாய்
தன்னையே வாட்டுகிறேனடி சுழலி
எத்தனை இருக்கை தனிமையாய் அழைத்து
உனக்கென காத்திருக்க சொன்னால் என்ன ?
வேறொரு காதலர்கள் அங்கே முத்தமிட
சிரித்துக் கொண்டே கடந்திட வேண்டாமா சங்கீதா.


No comments:

Post a Comment