Sunday 16 September 2018

இதயக்குறிப்பு

தினமும் கனவுல
எங்கயோ முட்டுது மூச்சு
சிருள் முடிக்காரிக் காதல்ல
நல்லா தான் சிக்கிகிச்சு மனசு
பேசாம ஒரு நாள் தூங்கிட்டேன்
விடியுற முன்னாடி அலறிச்சு
- என் வாட்ஸாப்பு

பெங்களூர் பொண்ணு
மயக்குறா நின்னு
பெரும் காதல் வீசுதுப் பாரு கண்ணு
இந்த மறதிக்காரனுக்கு மடியொன்னு
அந்த சங்கீதா மனசுல "வைத்தி"ருக்கும்
எந்த கடையில தான் விக்கும்
சட்டை நூலா அவ நினைப்பு!

கடிகார முள்ளப் போல
வெளந்தி புள்ள அவள சுத்தி வரேன்
சண்டிக்காரி சாவிக்கொத்தா
கோயம்பேடுல என்னை இணைச்சா
கூடயே வருவேன்னு சொல்லிவிட்டா
பரிசம் போட்டிருப்பேன் நெஞ்சுல!

தெரிஞ்சு தான் விட்டுடு வந்தேன்
என் டெட்டி பொம்மைய
இங்க எவளும் இல்ல
அவளப் போல என்ன கொஞ்ச
தீபக்குளம் நெறஞ்சிருக்கு நீரோட
தீபிகா எப்போ நீ வருவ விளையாட?



1 comment:

  1. வரிகள் அருமை. கவிதை இன்னும் மெருகேற்றப்பட வேண்டும்.

    உங்கள் பதிவு எங்கள் தளத்தில்...

    சிகரம் CLICK : Explore n experience | தீபக் | கவிதை | இதயக்குறிப்பு

    ReplyDelete