Saturday 22 September 2018

பெண் மயில்

அன்று புகைவண்டி நிலையத்தில்
தேடி வந்தது உன்னையல்ல
அக்கணம் புதிதாய் பிறந்த
என்னைக் காண

காதலெனும் உச்சிக்கிளை எட்டாதென
உள்ளம் துறந்த நொடியில்
எங்கிருந்து வந்தாய் தேவதையே
உன் வழித்தடம் எங்கும்
காதலின் ஓசை தானா சங்கீதா?

எத்தனை கர்வம் தான் உன்னுள்ளடி!
என் கவிதைகள்
உன்னை முத்தமிட பொழுதெல்லாம்.

தீண்டி தான் பார்க்கிறாய் என்னை
பிடிவாதம் கொண்டு கண்ணாம்பூச்சி ஆடினால்
கார்த்திகை மழையில் கலாபம் ஒளிந்திடுமா?

தலை குளித்து
உந்தன் கூந்தல் விரிக்கையில்
எத்தனை ஆண் மயில் கவிழ்ந்ததடி!
பெண் மயிலே என்னை கவர்ந்தாய்
மனம் சிக்குண்டு கிடக்குதடி.
ஆண்மையின் வசியம் பெண்ணுள் முடிவது
ஆயுள் முழுதும்
உன்னோடு ஓர் கூட்டினில் வசித்தால் போதும்.

No comments:

Post a Comment