காதலி பிரிவை எழுத
நிகண்டில் வார்த்தைகள் வேண்டினேன்
அவள் காத்திருந்த இரவுகளை
வெண்ணிலவே என்னிடம் சொல்வாயா?
அழகே, நீயில்லா வானம்
காற்றோடு கலைந்த மேகம்
காதலி எங்கே உன் கண்ணீர்த்துளி
அன்பிலா நெஞ்சம்
தாகங்கொண்டு தேடும்.
நீ இல்லாது இந்நொடி நிகழும்
தீச்சுடர் வடு பேசாது வலிக்கும்
பிரிந்திருக்கும் தனிமை
காணாது போல் கடக்கிறேன்.
நீ ஊட்டாத இரவு வேளை
உடன் கழிக்காத மாலைப் பூங்காற்று
என்னவாயிற்று என கேட்காத தலைவலி
நான் வாசிக்காது
நீ படிக்கும் இக்கவிதை
ஏதும் ஓர் நாள் வருமென
அனைத்தும் ஏந்தி கொள்கிறேன்
அதிகம் பிரியாது
சீக்கிரம் முத்தமிட வா.
நிகண்டில் வார்த்தைகள் வேண்டினேன்
அவள் காத்திருந்த இரவுகளை
வெண்ணிலவே என்னிடம் சொல்வாயா?
அழகே, நீயில்லா வானம்
காற்றோடு கலைந்த மேகம்
காதலி எங்கே உன் கண்ணீர்த்துளி
அன்பிலா நெஞ்சம்
தாகங்கொண்டு தேடும்.
நீ இல்லாது இந்நொடி நிகழும்
தீச்சுடர் வடு பேசாது வலிக்கும்
பிரிந்திருக்கும் தனிமை
காணாது போல் கடக்கிறேன்.
நீ ஊட்டாத இரவு வேளை
உடன் கழிக்காத மாலைப் பூங்காற்று
என்னவாயிற்று என கேட்காத தலைவலி
நான் வாசிக்காது
நீ படிக்கும் இக்கவிதை
ஏதும் ஓர் நாள் வருமென
அனைத்தும் ஏந்தி கொள்கிறேன்
அதிகம் பிரியாது
சீக்கிரம் முத்தமிட வா.
No comments:
Post a Comment