Saturday, 18 December 2021

தலைவியின் அருமையில்

கனவின் நுழைவாயிலில்
அருகருகே படுத்திருக்கிறோம்.
கைகள் இரண்டும் தீண்டிக் கொண்டே
ஒருவரில் ஒருவரர் கலந்திருப்போம்.

உள்ளம் கொண்ட வேட்கையோ
உடல் கொண்ட தடுப்பூசியோ
தேகம் முழுதும் சுடுகிறது.
தீபிகாவின் அருகாமையில்,
பற்றியெறிவது இயற்கையன்றோ!
என் பாதம் இரண்டும்
வலி கொண்ட பின்னே
அதனை ஏந்தியது-
உந்தன் கரங்களன்றோ

நம் உடலில் புத்துயிர் சேர்ப்பது இப்பேரன்பு அன்றோ
நாற்காலமும் மறந்து,
காதலென பிணைந்து, தீவொன்றில்
நாம் இருவரும் வாழ்வோம் வா.

என் வரிகள்
உன்னை கண்டால்
நெளிகிறது வெட்கத்தில்.
இதழ் கோர்த்து நீ படிக்கையில்
வார்த்தைகளும் புது இராகமாய் 
இனிக்கிறது என் செவிகளில்.
வேறு என்ன பேறு வேண்டுவேன்
என் தலைவியே
எம் வாழ்வு சிறப்புற்றதே
உந்தன் அன்பொளியில்!

No comments:

Post a Comment