கடற்கரையில நீ பார்க்க
கடலும் உன்னுடன் சேர ஓடிவரும்.
நீ உடுத்தும் உடைகள் கவிதைகளெனில்
உன் சேலை
தலைப்புடன் கூடிய கவிதை
நிலவை காட்டி
உணவை ஊட்டும் அம்மாவை போல்
உன்னை காட்டி
காதல் ஊட்டுகிறது வாழ்க்கை
"தீ"க்கதிரின் "பி"ன்னிருக்கும்"கா"ற்று
மேலெழுவது போல்
உன் முகம் என்றும் மேல் மலர உடனிருப்பேன்
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அன்பே.
பின்குறிப்பு:
இதை நான் எழுதவில்லை,
என்னை எழுத வைத்த கவிதை நீ!
No comments:
Post a Comment