உன்னை பிரிந்த துயரமும் சோர்வும்
எம்மை தீயின் நா கொண்டு தீண்டியதடி
என்னை மட்டும் கூராய் சுட்டிடும் காதல்
உனக்குள் தொற்றிட வில்லையா?
தீயினில் காய்வது எம் குணம்
குளிரினில் ஒய்வது
எம் துணைவி குணம்.
குளிரின் குறிப்பு குறையில் கொள்ளும்
உன்னுள் இறங்கிடா உணர்வாய்
உன்னோடு கழிந்திடாத வாழ்வாய்
உன் அறிவொளி அறியா கழையாய்
நம் காதலின் குறையாய்
என்றும் எனை நிரப்பிக் கொள்கிறேன்.
குளிரின் தன்மை பற்றிக்கொள்ள
எந்நாள் தன்னை எரித்திட வேண்டும் தீ?
எரியும் பொருள் ஏங்கிக்கொள்ள
உறை நிலையாய் உறங்க செல்வாயா
அல்லாது உன் நிலை உன்னதமென
இக்கரித்துகளை கறைய சொல்வாயா?
தனிமை தீயிற்கு குளிரின் வைப்பென்னவோ
எம்மை தீயின் நா கொண்டு தீண்டியதடி
என்னை மட்டும் கூராய் சுட்டிடும் காதல்
உனக்குள் தொற்றிட வில்லையா?
தீயினில் காய்வது எம் குணம்
குளிரினில் ஒய்வது
எம் துணைவி குணம்.
குளிரின் குறிப்பு குறையில் கொள்ளும்
உன்னுள் இறங்கிடா உணர்வாய்
உன்னோடு கழிந்திடாத வாழ்வாய்
உன் அறிவொளி அறியா கழையாய்
நம் காதலின் குறையாய்
என்றும் எனை நிரப்பிக் கொள்கிறேன்.
குளிரின் தன்மை பற்றிக்கொள்ள
எந்நாள் தன்னை எரித்திட வேண்டும் தீ?
எரியும் பொருள் ஏங்கிக்கொள்ள
உறை நிலையாய் உறங்க செல்வாயா
அல்லாது உன் நிலை உன்னதமென
இக்கரித்துகளை கறைய சொல்வாயா?
தனிமை தீயிற்கு குளிரின் வைப்பென்னவோ
பிரிவின் வலியை சொல்லி செல்லும் கவிதை அருமை
ReplyDeleteமகழ்ச்சி
Deleteகருத்துக்களுக்கு மிக்க நன்றி ராஜி :)