Monday 31 July 2017

உயிரெழுத்து

அன்பிற்குரிய காதலி
ஆசையில் ஒரு முறை அணைப்பாயா
இதயம் முழுதும் நீயடி
ஈர் உடல் ஓர் உயிர் நாமடி
உயிரில் கலந்த எரிமலை தீயே
ஊரறிய மணமுடிப்பதெங்கே?
எங்கு காணினும் கனவாய் உன் முகம்
ஏங்கும் மனதிற்கு ஆறுதல் எங்கனம்?
ஐயம் பயக்கும் பிரிவினை ஆயிரம்
ஒரு முறை தீர்வாய் ஆழ்ந்த முத்தம்
ஓர்மை கொள்ளும் இருமை விலகிடும்
ஔவை வயதிலும் (நம்) நேசம் நிலைத்திடும்
இ ஃ து உறுதிமொழி அல்ல உயிரெழுத்து.

2 comments:

  1. இந்த மாதிரியான காதல்கள் இதனால் பிடிக்கும் பைத்தியங்களும் இல்லாமல் போயிருந்தால் ... கவிதைகள் எப்பவோ செத்து போயிருக்கும் இல்லையா!

    கவிதை நன்று.
    கவிதை பகிர்வுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  2. வாசித்தமைக்கு மிக்க நன்றி மாசிலா

    ReplyDelete