Sunday 4 December 2016

அவள் ஓர் அழகிய வானிலை

பிரிந்து சென்ற மழலையென
தனியே அழும் வானம்
மனதில் விரவிருக்கும் குளிர்
வாணலியில் கொதிக்கும் தேநீர்
சாரல் ருசிக்கும் தனிமை
கொஞ்சம் நெருக்கமாய்
கதை பேச - அவள்

இளம் ஞாயிறின்
முத்தமிட்ட ஸ்பரிசம் - அவள் எழில்
நீர்திரை மத்தியில்
அடிச்சிறுத்த வானவில் - அவள் உயரம்
கரு வானில் மறைகொண்ட
கார்மேக நிலா - அவள் நாணம்
கைகளில் சுருட்டிய
கரும் சுழல்கள் - அவள் கூந்தல்
தென்றலோடு அசைந்தாடும்
குறிஞ்சி இதழ்கள் - அவள் திருக்காணி

குறியீட்டு விளக்க
 காலத்தினாற் -
அவள் ஓர் அழகிய வானிலை

அவளதிகாரம் படைக்க
புனைவில் சரங்கொன்றை தொடுத்தேன்
எழுத்துக்களின் மீதம் போக
கொஞ்சம் வடித்து வைத்தேன்
மடியில் உறங்கும் அவள் கனவிற்கு

அவள் -"நான் அறிவேன்
என தெரிந்தப்போதும்
விளையாட்டாய் ஏன் மறைக்கிறாய்" என்பாள்
நானோ- "என்ன செய்ய
உன்னிடம் இருந்து ஒளிய
அறியாதவன் - நான்" என்பேன்

காலத்தின் பிரிவில்
தன்னை நினைவிழந்து செல்வேன்
என்பாள் எள்ளலுடன்
சிறகிருக்கும் பறவைகள் எல்லாம்
வேறிடம் செல்வதில்லை
கொண்டை ஊசி முனையில்
நீ அமர்ந்து கொண்டாலும்
என் நெஞ்சம் உன்னிடத்தில் தஞ்சம்


1 comment: