எண்ணத்தில்
உன்னை நிரவிக்கொண்டு
எழும் சொற்களை முதற்கொண்டு
எழுத்தாணி
முனையில் துளையிட்டு
முறியில்
உன்னை தொடுத்து வைத்தேன்.
பட்டின் சாலை வழி
செல்லும்
பெண்ணே
குறுஞ்செய்தியில் புன்னகை உரித்து
ஏனடி கூட்டினுள் மறைகிறாய் ?
மறைப்பதினால்
தாழ் அடைப்பதினால்
படிக்க மறுப்பதினால்
தாழாது என் தமிழ் என்பேன்
நீ நிந்தித்தால்
என் கவி துறப்பேன்.
தவிர்ப்பதினால்
நம்மை பிரிப்பதினால்
என்னை எரிப்பதினால்
முழ்காது
என் ஓர்மை என்பேன்
உன் விழி விடுத்து
தனி உலகம் காண்பேன்.
Meaning:
புலவி- பொய்யான கோபம்
ஓர்மை- மனம்
கரு: ஊடலின் விளைவால் பேசாதிருக்கும் தோழியின் மேல் சினத்துடன் எழுதும் தோழனின் வரிகள்.
கவிஞர் "வைரமுத்து" வரிகளிலிருந்து inspire ஆகி எழுதிய வரிகள்.
நன்றி -"டுயட்" திரைப்படம்
This comment has been removed by a blog administrator.
ReplyDelete