Wednesday 19 October 2016

மௌனம்

அலைப்பேசி முனையில்
மொழிகளற்ற சலனம்
அம்மௌத்திற்கும் மயக்கம் உன்டெனில்
அழைத்தது நீயாக இருக்க வேண்டும்

சொல்லின் வளி மறித்து
வலியினில் கீறாதே பெண்ணே
சொந்தமற்ற நிழலென
தனிமையில் தீயிட்டு கொள்கிறேன்

எட்டா உயரந்தனில்
கிட்டா தேன் கூடு நீயெனில்
என்றோ உன்னிடம்
நேர துளிகள் கவரும்
கால கள்வன் நான்

நரம்பிழந்து பேசாமொழி தரித்த
யாழ் நானடி
கல்லறை தீவினில் புதையும் முன்
தாள் திறந்து தாலாட்டுவாயா

பாறைகளில் செய்த மனம் உனதென
மூங்கில் காட்டினுள் மறைந்து கொண்டால்
பூ துளைத்திடும் பொன்வண்டாவேன்
நேசத்தின் புல்லாங்குழல் இசைத்திட

ஒளியின் விரைவில்
ஒலித்திடுவாய் என
காத்திருக்கிறது எம் செம்மொழி

கரு: அலைப்பேசியில் பேச மறுத்து மௌனமாய் இருக்கும் தோழிக்கு, தோழனின்  கவிதை

No comments:

Post a Comment