அலைப்பேசி
முனையில்
மொழிகளற்ற
சலனம்
அம்மௌத்திற்கும் மயக்கம் உன்டெனில்
அழைத்தது
நீயாக இருக்க வேண்டும்
சொல்லின் வளி மறித்து
வலியினில் கீறாதே பெண்ணே
சொந்தமற்ற நிழலென
தனிமையில் தீயிட்டு கொள்கிறேன்
எட்டா உயரந்தனில்
கிட்டா தேன் கூடு நீயெனில்
என்றோ உன்னிடம்
நேர துளிகள் கவரும்
கால கள்வன் நான்
நரம்பிழந்து
பேசாமொழி தரித்த
யாழ் நானடி
கல்லறை தீவினில் புதையும் முன்
தாள் திறந்து தாலாட்டுவாயா
பாறைகளில்
செய்த மனம் உனதென
மூங்கில்
காட்டினுள் மறைந்து கொண்டால்
பூ துளைத்திடும் பொன்வண்டாவேன்
நேசத்தின்
புல்லாங்குழல் இசைத்திட
ஒளியின் விரைவில்
ஒலித்திடுவாய் என
காத்திருக்கிறது எம் செம்மொழி
கரு: அலைப்பேசியில் பேச மறுத்து மௌனமாய் இருக்கும் தோழிக்கு, தோழனின் கவிதை
No comments:
Post a Comment