Tuesday, 15 April 2025

110.தோழமை

பிறைமதிப் பின்னீர பேதையார் நட்பு

மறைமதி இருளில் 

நிழலினில் வேண்டினால்

முழு நிலவேன கூடாதோ நட்பு.


நட்பினை போல் ஓர் செயல் ஏது?

நட்பினை போல் ஓர் புரிதல் ஏது?

நட்பினை போல் ஓர் காவல் ஏது?

நம் நட்பு எல்லாமானது


கரம் பிடித்தவளின்

கைகளுக்கு பின்

தோழமை அல்லவா

தோள் சாய்க்கும்.

மதிப்பீடு எல்லாம்

தோற்று போகும் நிலை 

-நட்பு


எழுத்து

எண்ணம்

சொல்

அனைத்தும் விலகி இருந்தாலும்

எங்கிருந்து முடித்தேனோ

அதிலிருந்து தொடங்குகிறேன்.


தீக்காயும் நிலை என் தோழமை பிரிந்த உறவும் நட்பாய் கூடும் காலம் முழுதும் தன்னலமிற்றி தொடர்வது நட்பு


வழமையான நட்பு வேண்டாம்

முன்பு நம் தோழமை

வானின் கீழ் யாதும் பகிரும் நட்பு

இருவரும் உரிமை கொண்டு

விவாதமாய் ஆலோசனையாய்

அக்கறையான நட்பு.


நான் யாது மறந்தாலும்

அன்னமிட்ட கை மறவேன்

அன்னையின் கருணை மறவேன்

என் பாலிட்ட நலன் மறவேன்.


கல் விழுந்து கலங்கிய மனம்

களை எடுத்து வந்திருக்கிறேன்

தெளிந்த நீரோடையில்

புதிய மலர்ச்சி.


வான் உயரும் பறவை

மண்ணை விட்டு விலகினாலும்

பறவை பறந்திட விடுவேனா

பேணி காத்த நட்பை மறவேனா?


தாகம் தீர்க்கும் நீர்

முதல் அருவியில் விழுந்தாலென்ன

நடு அருவியில்விழுந்தாலென்ன

நீரின் தன்மை மாறிடுமா?


இனிமையான இசையில்

மௌனம் அழகு

நம் தொடர் நட்பில்

இந்த மௌன இடைவேளை 

முடிந்ததென தொடர்வோம்.


No comments:

Post a Comment