Sunday, 6 April 2025

109.கேள்விக்குறி

எனக்கான வலியை

அறிவார் யாரும் உண்டோ என்றாய்

உங்கள் வலியும்

நான் அன்றோ சுமக்கிறேன் என்றாய்

என் செங்கண்ணீர் துளிகள்

உங்களுக்கா பாரம் என்றாய்

எல்லாவற்றையும் கேட்டேன் நிதானமாய்.


நான் வரிகள் வடிப்பேன்

என தெரியுமா?

என் விருப்பு வெறுப்புகள்

தெரியாது உனக்கு

நள்ளிரவில் நணையும்

என்னவளின் துயரம் அறியாது


ஆனால் எங்கள் எல்லோர் பாரத்தையும் 

சுமைக்கும் சுமைதாங்கி நீ


நீ கடக்கும் முட்களில்

என் கடந்த கால இரத்தம் தோய்ந்திருக்கிறது

காதலில் வெல்வது மட்டும்

வாழ்க்கையாகிடுமா?

அல்லது காதலர் கதவணைகளில்

கவலைக்கு இடமில்லையா?


என் சிலுவையின் கணங்களை

என்று உன் தோளில் அறைந்தேன்?

என் அழ்மனதின் அழம் அறிவாயா நீ?

அவளும் நானும் 

இன்றும் நாளையுமாய்

நற்செய்தி நினைந்திடும் ஓட்டம் தெரியுமா?


சேற்றில் இருப்பதால்

செந்தாமரை அழுவதில்லை

அருவமாக இருப்பதால்

காற்றும் கலங்குவதில்லை

உறங்கி படுக்க 

உனக்கு தனியிடமுண்டு

வானமே கூரையாய் 

வாழும் மக்கள் வலிகளை 

கேட்க ஏதும் காதுகள் உண்டோ?


தூரச் சுமையை

பெரிதாய் காணும்

கண்கள் உனக்கு

துயில் துறக்கும் துயரா காதல் 

அறுதியில் என்ன?

காதலில் முடிப்பது 

மானுடத்தின் மைல்கல்லா என்ன?


இன்னும் எத்தனை இதயங்கள்

தீயிட்டு கொழுந்த

பின்பொரு நாள் காதலேனும் வெல்லுவாயின்

காலம் தோறும் நீ இழந்தவை என்ன?


கேட்கும் நிலையிலோ நீ இல்லை

கேள்வி குறியினில் முடியும் ஓர்

கவிதையுமில்லை.

No comments:

Post a Comment