Tuesday 23 May 2017

என் அருமை காதலி-2

அவசரம் அவசரம்
அத்தனைக்கும் அவசரம்
இக்கணம் முதல் நிதானமாய்
காதல் பயின்றிட அவசரம்
கடல் கடந்து காலம் மறந்து
கட்டியணைத்திட அவசரம்
நான்கு கண்கள் கலந்து
ஒற்றை காட்சி காண்டிட அவசரம்
சுருள் முடி கொண்டாள்
தலை கலைத்திட அவசரம்
பிறை நிலா நெற்றியில்
முத்தம் பதித்திட அவசரம்
உன் ஆசை தீ எனக்காய்
ஒளிர்ந்திட அவசரம்
யாருமற்ற காட்டினில்
நம் பெயர் உரைக்க அவசரம்

உனக்கான காதலை
பதிந்திட அவசரம்
நம் காதல் கவிதைகளை
நீ எழுதிட அவசரம்
நீ எனக்கானவள் என
சுற்றம் அறிந்திட அவசரம்
நம் மணமுடிப்பதை
நட்பிற்கு சொல்லிட அவசரம்
வானூர்தியில் இறங்கிய கணம்
வாழ்க்கை வாழ்ந்திட அவசரம்
நாம் நச்சயித்த நொடியில்
பெற்றோர் கண்கள் பணிந்திட அவசரம்
இவர்கள் மணமக்கள் என
அழைப்பிதழ் பதிந்திட அவசரம்

திருமண பொழுதினில்
உன் விழி நீரை துடைத்திட அவசரம்
காலம் முழுதும் கரம் பிடிப்பேன் என
தீபம் முன் உறுதிட அவசரம்
நம் திருமண வாழ்க்கை தனை
தேவர்கள் வாழ்த்திட அவசரம்
கட்டிலில் ஆடை களைந்து
பிறந்த மழலைகளாய் முத்தமிட அவசரம்
தாயான உனை
மடியில் தாங்கிடும் அவசரம்
என்னையும் சேர்த்து
மூன்று பிள்ளைகள் பெற்றிட அவசரம்
முப்பது ஆண்டுகள் கடந்த பின்னும்
காதல் கவிதை எழுதிட அவசரம்

என் வேகம் தனை தனித்து
நிதானம் அருள்வாயா
என் அருமை காதலி?

2 comments: