Saturday 20 May 2017

என் அருமை காதலி

தனியே இருக்கும் ஒற்றை தோணி
காதல் கொண்டால்
கரையினை கடக்கும்
கண்கள் உன் மேல் மையல் கொண்டால்
கலங்கும் நெஞ்சமும்
கவிதை கொள்ளும்.

சிறகு விரிந்த என்
கவிதை மழலைகள்
உன் மடி தேடி
தஞ்சம் கொள்கிறது.

களவாடிய கனவுகளை புன்னகையுடன் நிரப்பி தா
இங்கே உறக்கம் இன்றி தவிக்கிறேன்
நிஜமென்று எண்ணி கண்ணுறங்க சென்றால்
அனைத்தும் கனவென இருள் களவாடி கொண்டால் என் செய்வேன்?

கணிணியில் முகம் கண்டால்
வரிகள் வற்றிவிடுமாம்
அயிரமாயிரம் கவிதை பேசும் விழிகளுக்கு
வார்த்தைகள் ஏதற்கடி?

உன் தோள் கொண்டு அணைக்கவில்லை
உன் தலை சாய்த்து இதயம் துடிப்பதில்லை
உன் கண்ணீர் தனை கரம் கொண்டு
எந்திடவில்லை
(எம்)இமை கொண்டு உன் விழி கோதிடவில்லை
கனவுகள் கிழித்து கலவி புரிந்திடவில்லை
இத்தனையும் இல்லாது
எம் காதலை பொறுப்பாயா
என் அருமை காதலி?

1 comment: