இல்லம் நுழைகையில்
தேநீர் கோப்பையுடன் தேடும் கண்கள்
நீயிடும் நீர்க்கோலத்தின் ஒலியலைகள்
குளியல் அறை இலையுதிர்காலம்
ஐந்து நிமிட காத்திருப்பின் முடிவில்
அறை நுழைய அனுமதி
தனிமையறையின் தனித்துவம்
நுரையிரலில் தீண்டும் உன் வாசம்
அந்நாளைய கவலைதனை
மறைக்க பார்க்கும் அரிதாரம்
பதற்ற இதழ் சுவைக்கும் பேனா
குறிப்புகளின் தோழனாய் மடியுறங்கும் டைரி
கரை இல்லா கரு மை தீட்டியவள்
கடலோடு பேசவேண்டும் என்றாள்
நிலவொளியில் நிலங்குளிரும் வேளை
கடலோடு நெருங்கி விட்டோம் என
சாறலாய் வீசப்படும் திரவமலர்கள்
நிலமகளின் இடை வளைவான கடற்கரையினை
இயற்கையின் சந்திப்பிழையென நிறைக்கும் அலைகள்
கடலினுள் புதைந்து இருக்கும் காதலின் வலியினை
கரை சேர்க்க பார்க்கிறதோ காற்றின் ஒலிகள்
மறுமுறை கடற்கரை சென்றால்
மௌனத்தின் ஏற்புவாய் கொண்டு மனதை தீட்டுங்கள்
காதலின் அலைவரிசை கரையினில் மூழ்கடிக்கும்
உணர்ச்சிகள் பெருக்கெடுத்து ஓடும் பாதையில்
நமது மௌனம் பூத்தூவி சென்றது
கற்களில் அலை தெறித்து
அழைத்துச் சென்றது நம் வார்த்தைகளை
தோள் சாய்ந்து கொண்டே கேட்டாய் தோழி
இந்நொடியினை பதிவு செய்வாயாயென
இதோ கடலின் நீலம் கொண்டே
நிரப்பிவிட்டேன் நினைவுகளை.
**********************************************************************************
பொருள்:
ஏற்புவாய்- Transistor
சந்திப்பிழை- http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-13410.html
நன்றி:
மௌனத்தில் புதைந்த கவிதைகள்-வைரமுத்து
தாழாங்குப்பம் கடற்கரை
tamilpaper.net
tamilmantram.com
thozhilnutpam.com/chollagaraathi.htm
தேநீர் கோப்பையுடன் தேடும் கண்கள்
நீயிடும் நீர்க்கோலத்தின் ஒலியலைகள்
குளியல் அறை இலையுதிர்காலம்
ஐந்து நிமிட காத்திருப்பின் முடிவில்
அறை நுழைய அனுமதி
தனிமையறையின் தனித்துவம்
நுரையிரலில் தீண்டும் உன் வாசம்
அந்நாளைய கவலைதனை
மறைக்க பார்க்கும் அரிதாரம்
பதற்ற இதழ் சுவைக்கும் பேனா
குறிப்புகளின் தோழனாய் மடியுறங்கும் டைரி
கரை இல்லா கரு மை தீட்டியவள்
கடலோடு பேசவேண்டும் என்றாள்
நிலவொளியில் நிலங்குளிரும் வேளை
கடலோடு நெருங்கி விட்டோம் என
சாறலாய் வீசப்படும் திரவமலர்கள்
நிலமகளின் இடை வளைவான கடற்கரையினை
இயற்கையின் சந்திப்பிழையென நிறைக்கும் அலைகள்
கடலினுள் புதைந்து இருக்கும் காதலின் வலியினை
கரை சேர்க்க பார்க்கிறதோ காற்றின் ஒலிகள்
மறுமுறை கடற்கரை சென்றால்
மௌனத்தின் ஏற்புவாய் கொண்டு மனதை தீட்டுங்கள்
காதலின் அலைவரிசை கரையினில் மூழ்கடிக்கும்
உணர்ச்சிகள் பெருக்கெடுத்து ஓடும் பாதையில்
நமது மௌனம் பூத்தூவி சென்றது
கற்களில் அலை தெறித்து
அழைத்துச் சென்றது நம் வார்த்தைகளை
தோள் சாய்ந்து கொண்டே கேட்டாய் தோழி
இந்நொடியினை பதிவு செய்வாயாயென
இதோ கடலின் நீலம் கொண்டே
நிரப்பிவிட்டேன் நினைவுகளை.
**********************************************************************************
பொருள்:
ஏற்புவாய்- Transistor
சந்திப்பிழை- http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-13410.html
நன்றி:
மௌனத்தில் புதைந்த கவிதைகள்-வைரமுத்து
தாழாங்குப்பம் கடற்கரை
tamilpaper.net
tamilmantram.com
thozhilnutpam.com/chollagaraathi.htm
Azhagaana vaarthaigal☺��
ReplyDeleteMikka nandri deepika
DeleteRomba nallarukku Deepak.
ReplyDelete//
நிலமகளின் இடை வளைவான கடற்கரையினை
இயற்கையின் சந்திப்பிழையென நிறைக்கும் அலைகள்
This comment has been removed by a blog administrator.
ReplyDelete