Sunday 5 June 2016

காதலின் கரைதனிலே

இல்லம் நுழைகையில்
 தேநீர் கோப்பையுடன் தேடும் கண்கள்
நீயிடும் நீர்க்கோலத்தின் ஒலியலைகள்
 குளியல் அறை இலையுதிர்காலம்
ஐந்து நிமிட காத்திருப்பின் முடிவில்
 அறை நுழைய அனுமதி

தனிமையறையின் தனித்துவம்
  நுரையிரலில் தீண்டும் உன் வாசம்
அந்நாளைய கவலைதனை 
  மறைக்க பார்க்கும் அரிதாரம்
பதற்ற இதழ் சுவைக்கும் பேனா
 குறிப்புகளின் தோழனாய் மடியுறங்கும் டைரி

கரை இல்லா கரு மை தீட்டியவள்
 கடலோடு பேசவேண்டும் என்றாள்
நிலவொளியில் நிலங்குளிரும் வேளை
 கடலோடு நெருங்கி விட்டோம் என
சாறலாய் வீசப்படும் திரவமலர்கள்

நிலமகளின் இடை வளைவான கடற்கரையினை
 இயற்கையின் சந்திப்பிழையென நிறைக்கும் அலைகள்
கடலினுள் புதைந்து இருக்கும் காதலின் வலியினை
 கரை சேர்க்க பார்க்கிறதோ காற்றின் ஒலிகள்
மறுமுறை கடற்கரை சென்றால்
 மௌனத்தின் ஏற்புவாய் கொண்டு மனதை தீட்டுங்கள்
காதலின் அலைவரிசை கரையினில் மூழ்கடிக்கும்

உணர்ச்சிகள் பெருக்கெடுத்து ஓடும் பாதையில்
  நமது மௌனம் பூத்தூவி சென்றது
கற்களில் அலை தெறித்து
 அழைத்துச் சென்றது நம் வார்த்தைகளை
தோள் சாய்ந்து கொண்டே கேட்டாய் தோழி
 இந்நொடியினை பதிவு செய்வாயாயென
இதோ கடலின் நீலம் கொண்டே
 நிரப்பிவிட்டேன் நினைவுகளை.
**********************************************************************************

பொருள்:
ஏற்புவாய்- Transistor

சந்திப்பிழை-  http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-13410.html

நன்றி:
மௌனத்தில் புதைந்த கவிதைகள்-வைரமுத்து
தாழாங்குப்பம் கடற்கரை
tamilpaper.net
tamilmantram.com
thozhilnutpam.com/chollagaraathi.htm



4 comments:

  1. Deepika Gangadhar5 June 2016 at 22:10

    Azhagaana vaarthaigal☺��

    ReplyDelete
  2. Romba nallarukku Deepak.
    //
    நிலமகளின் இடை வளைவான கடற்கரையினை
    இயற்கையின் சந்திப்பிழையென நிறைக்கும் அலைகள்

    ReplyDelete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete