Sunday 18 January 2015

நீலம்



மீதம் இருக்கும் மார்கழியில்
நமக்காகவே அமர்ந்திருக்கும்
 கல் படுகையின் மேல்
குளிரின் நிறம் என்னவென்று வினவினாய்
இருவரின் இடைவெளியை கூர்ந்து-"நீலம்" என்றேன்

நீலம் என்றால்-
  போர்த்தி இருக்கும் ஆடையை பார்த்து இதையா “-என்றாய்

"இளம் சூரியனின் அரவணைப்பை
  தொலைத்த நிறம்- நீலம்
 தன்னுளே சிறை கொண்ட
  அலையின் ஒளியானது- நீலம்
 உயிர் பிரிந்த
   உடலானது -நீலம்
 அவள் போன்றே அரிய முடியா
  தன்மைகளும் இயற்கையில் - நீலம்" என்றேன்

ஒரு நீண்ட மெளனம்.....
  விடையின் விடயம் (அவள்) மனதில் சிதறியிருக்க
 "மனம் இறுகி ,
  அன்பினை புரியதவள் நான்-
 இந்த குளிரினைப் போல
    நம் நேசத்தின் ஆயிரத்தில் ரு நீளம் மட்டுமே நான்" என்றாள்.

இதழ் சேர்த்த புன்னகையோடு சொன்னேன்
  பிருந்தாவனத்தின் நீல வண்ணன்
  நம் எண்ணெந்தனை சேர்த்து வைப்பான்.

img source: internet

2 comments: