நமக்காகவே
அமர்ந்திருக்கும்
கல் படுகையின் மேல்
குளிரின்
நிறம் என்னவென்று வினவினாய்
இருவரின்
இடைவெளியை கூர்ந்து-"நீலம்" என்றேன்
நீலம்
என்றால்-
போர்த்தி இருக்கும் ஆடையை பார்த்து “இதையா “-என்றாய்
"இளம்
சூரியனின் அரவணைப்பை
தொலைத்த நிறம்- நீலம்
தன்னுளே சிறை கொண்ட
அலையின் ஒளியானது- நீலம்
உயிர் பிரிந்த
உடலானது -நீலம்
அவள் போன்றே அரிய
முடியா
தன்மைகளும் இயற்கையில் - நீலம்" என்றேன்
ஒரு நீண்ட மெளனம்.....
விடையின் விடயம் (அவள்) மனதில்
சிதறியிருக்க
"மனம் இறுகி ,
அன்பினை புரியதவள் நான்-
இந்த குளிரினைப் போல
இந்த குளிரினைப் போல
நம்
நேசத்தின் ஆயிரத்தில் ஒரு நீளம் மட்டுமே நான்"
என்றாள்.
இதழ் சேர்த்த புன்னகையோடு சொன்னேன்
பிருந்தாவனத்தின்
நீல வண்ணன்
நம்
எண்ணெந்தனை சேர்த்து வைப்பான்.
img source: internet
img source: internet
ரசித்தேன்...
ReplyDeletesema
ReplyDelete