Wednesday 4 January 2012

காதல் பதிவுகள்-4

ஆன்சைட்டு மாப்பிள்ளை என
ஆசையாய் கட்டி வைத்தீர்கள்
ஆனால்
அவர் இதமாய் இரவு அணைத்துக்கொள்வது
ஆறுபதாயிரம் ருபாய் மடிக்கணிணியை

ஆடம்பரமாய் இருக்கிறேன்
என ஊரார் பேசினாலும்
உள்ளுக்குள் புழுங்கி கொண்டுருக்கிறேன்
அணையா நெருப்பாய்

கழுத்துக்கு தங்க மாலைகள்
போட்டு அனுப்பி வைத்தீர்கள்
ஆனால்
அவர் இன்று வரை பாசமாய் சூட்டியதில்லை
என் தலையில் மல்லிகை

காதலால் உருகியவனுக்கு மாத சம்பளம்
ஆராயிரம் என்றாலும்
நிறைவாய் மகிழ்த்திருப்பேன்
அவனுடன் என் வாழ்வை

நானும் ஒரு சுயநலவாதி ஆகியிருக்கலாம்
என்ன செய்வது
இரண்டாவதாய் இருக்கும் ராஜியின் திருமணம்
புதைத்தது என் காதலை

எல்லவற்றையும் உங்களிடம்
சொல்லி அழுதிருக்கலாம்
தங்களின் இரத்த கொதிப்போ என்னை கிழிக்க செய்துவிட்டது
இந்த கடிதத்தை

No comments:

Post a Comment