ஓர் ஆழமான தயக்கம்
அவள் கண்களில்
எத்தனை கேட்கினும்
இனியும் பயனில்லை
போதும்!
அவள் கண்களில்
எத்தனை கேட்கினும்
இனியும் பயனில்லை
போதும்!
இங்கிருந்து நகர வேண்டும் எனக்கு.
இதோ இதே இடத்தில்
என் பின்னால்
நாங்கள் விளையாடி உடைத்த
பீங்கான் பொம்மைகள்
பல இரவுகளில்
அவள் ஊட்டிய நிலா சோறு
என் முதல் சம்பளத்தில்
அவள் கையணைத்த வளையல்
இன்று
அவள் மண ஒப்பந்த செய்தி
பொறுமையிழந்து உடைந்தேன்
என்ன வேண்டும்
என் புன்னகை தானே?
உன்னுடனே கொண்டு செல்
ஒன்றும் சொல்லாது
தலை கவிழ்ந்து சென்றாள்.
No comments:
Post a Comment